வயதாக ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனைகளும் வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எழுந்து நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள்.
முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எலும்பு தேய்மானமும், கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகிறது. இதனை தவிர்க்க முருங்கை விதைகளை பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.
என்னென்ன தேவை?
முருங்கை விதை- 5 கி., நெய் 1 ஸ்பூன், பால்- 1 டம்ளர், நாட்டு சர்க்கரை
எப்படி செய்வது?
முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளிலிலோ அல்லது மிகவும் முற்றிய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகளை மட்டும் தனியே எடுத்து காய வைத்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி இந்த முருங்கை விதைகளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் ஒரு டம்ளர் அளவிற்கு பால் சேர்த்து கொதிக்க வைத்து சுவைக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை கலந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சத்து குறைபாட்டால் தலை சுற்றுதல், மற்றும் கண் பிரச்சனை, கண் மங்குதல் கால்சியம் குறைபாடு, மூட்டு வலி,எலும்பு பிரச்சனை, எலும்பு தேய்மானம், கால் வீக்கம், கெட்ட கொழுப்பு ஆகிய அனைத்தும் நீங்கும். நரம்பு மண்டலத்தை வலுவாகி உடலை பலப்படுத்தும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



