தமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் இனி ஏமாற தேவையில்லை.. அரசு கொண்டுவரும் சூப்பர் வசதி

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் சொத்து பரிமாற்றத்தன் போது ஏமாறுவதை தடுக்க பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் புது வசதியை வருவாய் துறை அளிக்க போகிறது. இதன் மூலம் இனி யாரும் போலி பட்டாவை பார்த்து ஏமாற வேண்டியது இருக்காது.

தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர் வில்லங்கமான சொத்துக்கள் மற்றும் அரசு சொத்துக்களை வாங்கி ஏமாறது அடிக்கடி நடக்கிறது.சிலர் அரசியல் கட்சி பிரமுகர்களின் துணையுடன், அரசு நிலங்ககளை ஆக்கிரமித்து ஏமாற்றி விற்பது, பஞ்சமி நிலங்களை ஏமாற்றி விற்பது, அரசால் கையகப்படுத்தப்பட்ட அனாதி நிலங்களை ஆக்கிரமித்து ஏமாற்றி விற்பது, ஆற்றின் கரையோரங்களில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து ஏமாற்றி விற்பது, அரசு பூங்கா, ரேஷன் கடை, தண்ணீர் தொட்டி போன்ற பயன்பாட்டிற்காக வைத்துள்ள நிலங்களை ஆக்கிரமித்து குடியேறி அதை யாருக்காவது விற்பது போன்றவை கடந்த காலங்களில் பலமுறை நடந்துள்ளது.

இதேபோல் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து விற்பது, குத்தகை நிலங்களை ஏமாற்றி விற்பது, வேறுஒருவரின் நிலத்தை தன் நிலம் என்று போலிஆணங்கள் தயாரித்து அதனை உடனே வேறு ஒருவருக்கு விற்பது போன்ற மோசடிகளையும் சிலர் செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிலத்தில் உள்ள வாங்கி வீடு மனைகளை வாங்கி மக்கள் ஏமாறக்கூடாது என்று முடிவு செய்துள்ள தமிழக அரசு சர்வே எண் வாரியாக, பட்டா மாற்றம் தொடர்பான முந்தைய விபரங்களை தொகுத்து அளிக்கும் புதிய வசதி அளிக்க முடிவு செய்துள்ளது.

தற்போதையநிலையில் பத்திரப்பதிவு விபரங்களை அறிய, சொத்து வாங்குவோர் வில்லங்க சான்றிதழ் பெறுகின்றனர். இதன் வாயிலாக, சொத்தில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை எளிதாக அறிய முடியும். அதேநேரம், சொத்தின் பட்டா யார் பெயரில் உள்ளது; இதற்கு முன் யார் யார் பெயரில் இருந்தது என்ற விபரங்களை வில்லங்க சான்றிதழை வைத்து அறிய முடியாத நிலை இருக்கிறது. அதனால் தான், சிலர் போலியாக பட்டா தயாரித்து, மக்களை மோசடி செய்கிறார்கள்..

குறிப்பாக சொல்வது என்றால், நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்கள் போன்ற நிலங்கள் விற்கப்படுகிறது. எனவே இந்த மோசடியாக விற்பதை தடுக்க, நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்களின் வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலங்களுக்கான சர்வே எண்கள், சார் – பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

எனினும் பல இடங்களில் அரசு மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்கள், போலி பட்டாக்கள் வாயிலாக அபகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பட்டா இருக்கிறது என்று நினைத்து பொதுமக்களும் இந்தச் சொத்துக்களை வாங்கி ஏமாறுவது நடக்கிறது. எனவே ஏமாறுவதை தடுக்க ஒரு குறிப்பிட்ட சர்வே எண், எந்தெந்த காலத்தில் யார் யார் பெயருக்கு உட்பிரிவு செய்துள்ளாரக்ள்.. அதன் மொத்த பரப்பளவு என்ன; தற்போது விற்கப்படும் பரப்பு உண்மையிலேயே பட்டாவுக்கு உட்பட்டதா என்பதை இனி வருவாய் துறையின் மூலம் எளிதாக அறியமுடியும்.

சொத்து பரிமாற்றத்திற்கு எப்படி வில்லங்க சான்று இருப்பது போல், பட்டா பரிமாற்றத்திற்கும் தகவல் தொகுப்பு விஏஓ அலுவலகங்களில் மட்டுமே பார்க்க முடியும். இந்த விபரங்களை, பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக அறிய, புதிய வசதி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு சொத்தை வாங்கும் நபர், அது குறித்த சர்வே எண்ணை உள்ளீடு செய்தால், அந்த சர்வே எண்ணில், இதற்கு முன் நடந்த பட்டா மாற்ற விபரங்களை இனி ஆன்லைனில் எளிதாக பார்க்க முடியும்.எனவே போலியாக ஒரு பட்டாவை தயாரித்து நில மோசடி செய்வது இனி யாரும் ஏமாற்ற முடியாது.