ஏலியன்ஸை தேடி போன இரண்டு பேர்.. மறைந்தவர்கள் உடலில் போலீஸார் பார்த்த விஷயம்.. 60 வருசமா தீர்க்க முடியாத கேஸ்..

By Ajith V

Published:

பூமி என்ற கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்க, இவர்களுடன் ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களும் இங்கே வலம் வந்த வண்ணம் உள்ளனர். மனிதர்கள் தான் இந்த பூமியில் மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நிற்கும் அதே வேளையில், பூமியை போல மற்ற கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா அல்லது வேறு உயிரினங்கள் இருக்குமா என்பதே பெரிய கேள்வி தான்.

இது தொடர்பாக பல விதமான ஆராய்ச்சிகள் நிகழ்ந்து வரும் நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பாக நிறைய வியப்பான முடிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதே வேளையில், இவை அனைத்தையும் விட ஏலியன்ஸ் குறித்த தகவல்கள், பல ஆண்டுகளாக மனிதர்களுக்கே ஒரு வித பயத்தை கொடுத்து தான் வருகிறது.

வேறு கிரகத்தில் இருந்து மனிதர்களை போல அல்லாமல், விலங்குகளின் உருவத்தை ஒத்து ஏலியன்ஸ் என்ற கிரகவாசிகள் இருப்பது பற்றியும் நிறைய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் மீது மனிதர்கள் பலருக்கும் நம்பிக்கை இல்லை என்ற போதிலும் இன்னொரு பக்கம் பல விஞ்ஞானிகள் ஏலியன்ஸ் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதுடன் அவை உருவம் குறித்தும் நிறைய தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் ஏலியன்ஸ் குறித்த திரைப்படங்கள், இந்திய மொழி வரை வெளியாகி வரும் சூழலில், ஒருவேளை அவர்கள் நிஜமாக இருந்து நாளை பூமிக்கே வந்தாலும் மனிதர்கள் கூட சண்டை போடுவார்கள் என்றும் பயங்கர தகவல்களும் வெளியாகி வருகிறது.

இதனிடையே, ஏலியன்ஸை தேடி போன இரண்டு பேர் பற்றிய தகவல், பலரையும் அச்சப்பட வைத்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த எலக்ட்ரானிக் டெக்னீசியன்கள் தான் மனோல் பெரய்ரா டா க்ரூஸ் மற்றும் மிகுவேல் ஜோஸ் வியானா (Manoel Pereira da Cruz and Miguel Jose Viana). இவர்கள் இரண்டு பேரும் கடந்த 1966 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக போலீஸாரும் சம்பவ இடம் சென்று விசாரணையை மேற்கொள்ள, அவர்கள் ஃபார்மல் உடையில் வாட்டர் ப்ரூஃப் கோட்கள் மற்றும் முகத்தில் மாஸ்க் ஒன்றையும் அணிந்தபடி இருந்துள்ளனர். இதற்கடுத்து அவர்களிடம் கிடைத்த சிறிய நோட் புக் ஒன்றில், “மாலை 4:30 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். 6:30 மணிக்கு அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு சமிக்ஞை கிடைக்கும்” என இருந்தது போலீசார் உள்ளிட்ட அனைவரையும் குழம்ப செய்தது.

மேலும் இந்த இரண்டு பேரின் உடலிலும் எந்தவித காயங்களும் இல்லாமல் போனதும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இது தொடர்பாக பின்னர் நடந்த விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர்கள் காணாமல் போனதாகவும் ஒரு பாருக்கு அவர்கள் சென்ற போது பதற்றமாக இருந்ததாகவும் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல், மனோல் பெரய்ரா டா க்ரூஸ் மற்றும் மிகுவேல் ஜோஸ் ஆகிய இருவரும் வேற்றுகிரக வாசிகளுடன் தொடர்பில் இருப்பதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக அவர்களின் நண்பர்கள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் உயிரிழந்து கிடந்த இடத்தில் UFO-வை பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வெளி உடலில் காயம் கூட இல்லாமல் உயிரிழந்து கிடந்த இரண்டு பேரின் வழக்கு இன்னும் முடிவுக்கே வராத நிலையில், ஆய்வுக்கு கூட தற்போது உட்படுத்த முடியாத அளவுக்கு உடல்கள் தற்போது சிதைந்து போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tags: Alens, UFO