அட்மின் செய்த தவறு.. ஹார்வர்ட் பல்கலை விவகாரத்தில் திடீரென பின்வாங்கிய டிரம்ப் அரசு..!

  கடந்த சில நாட்களுக்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஹார்ட்வர்ட் பல்கலைக்கு அனுப்பப்பட்ட கடும் சொற்கலாள் ஆன கடிதம் தவறாக அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இது New York Times…

trump 1

 

கடந்த சில நாட்களுக்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வெள்ளை மாளிகையில் இருந்து ஹார்ட்வர்ட் பல்கலைக்கு அனுப்பப்பட்ட கடும் சொற்கலாள் ஆன கடிதம் தவறாக அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. இது New York Times வெளியிட்ட புதிய தகவலின் அடிப்படையில் கூறப்படுகிறது.

அந்த கடிதம், அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனிதவளத் துறையின் சட்ட ஆலோசகராக செயற்பட்டு வரும் ஷான் கீவ்னி என்பவரால் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதம் அரசின் அனுமதியில்லாமல் அனுப்பப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிதத்தில் உள்ள தகவல்கள் உண்மையானவைதான். ஆனால், அதை வெளியிடும் முறையில் உள்ள குழப்பமே இந்த பிரச்சனையை உருவாக்கியது என்று கூறப்படுகிறது. சில அதிகாரிகள் கடிதம் சீக்கிரமாக அனுப்பப்பட்டதைக் கண்டித்துள்ளனர். மற்றவர்கள் அதை உள்ளக ஆய்வுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதென நினைத்துள்ளனர்.

இந்த கடிதம், ஹார்வர்டும் வெள்ளை மாளிகை பணி குழுவும் நடத்திய உரையாடல்களை முடக்கி விட்டது. குறிப்பாக அந்தக் கடிதம், பல்வேறு வெளிநாட்டு நன்கொடைகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய முழுமையான விபரங்களை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நியமன முறைகள், சேர்க்கை விதிமுறைகள், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதுவே ஹார்வர்டின் அதிர்ச்சிக்கு காரணமாக இருந்தது.

அதிபர் டொனால்ட் டிரம்ப், உயர்கல்வி நிறுவனங்கள் இடதுசாரி சிந்தனைகளை பரப்புகின்றன எனக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தனது சமூக வலைதளத்தில் ஹார்வர்டை குற்றம்சாட்டியுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதிபர் ஆலன் கார்பர், “எந்த அரசும், எவ்வகை கட்சியானாலும்ம் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்றுத்தர வேண்டும் என நிர்ணயிக்க முடியாது,” எனக் கடுமையாக பதிலளித்தார். நிதி கிடைக்காவிட்டாலும் சரி, அரசின் இந்த முடிவை எதிர்க்கிறோம் என அவர் கூறினார்.

இப்போது கடிதம் அங்கீகரிக்கப்படாதது என்று கூறப்பட்டாலும், அதன் தாக்கம் அரசியல் மற்றும் சட்ட ரீதியான மோதலுக்கு வழிவகுத்துவிட்டது. கல்விச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மத்திய நிதியுதவி ஆகியவை இப்போது கேள்விக்குறியாக உள்ளன.

நம்மூரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்துவிட்டு அட்மின் செய்த தவறு என சமாளிப்பது போல், டிரம்ப் அரசு தற்போது இந்த விவகாரத்தில் ஒரு அதிகாரியை பலிகடா ஆக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.