“பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..

By John A

Published:

கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்த கருத்து ஒன்றினைத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

ஏற்கனவே சின்மயி வைரமுத்து பரபரப்பு புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சுசித்ராவும் “நான் என் பாட்டியுடன் வைரமுத்து வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஷாம்பு பாட்டில் பரிசாகக் கொடுத்தார். அதை அப்போது மரியாதை கருதி ஏற்றுக் கொண்டு பின் வீட்டிற்கு வந்ததும் சில நாட்கள் வைத்திருந்து வந்தவர்கள் என்னவென்று கேட்ட போது சொல்லிச் சிரித்து பின்னர் சில நாட்கள் குப்பையில் வீசி விட்டோம்.

என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம், அவள் உங்கள் மகள் போன்றவள். நீங்கள் தான் அவரை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கூறிய போதே அவருக்கு வியர்த்துக் கொட்டியது. கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக ஒரு பதிவினை கவிதை நடையில் போட்டிருந்தார். அதில்,

வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்

இ-சிகரெட் பயன்படுத்திய இளம்பெண்.. 2 லிட்டர் கருப்பு ரத்தம்.. அதிர்ச்சியில் டாக்டர்கள்..!

பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்

தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்

இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்

அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்

உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்

என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார் வைரமுத்து. இவர் பாடகி சுசித்ராவைத் தான் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...