ஒரு பிள்ளையைப் பத்து மாசம் சுமந்து பெறுவது என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி எடுக்குற மாதிரின்னு சொல்வாங்க. அதனால பேறுகாலத்துல கண்ணும் கருத்துமா அவங்க உடல்நலன்ல அக்கறை செலுத்த வேண்டும். அதே நேரம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட சக்தின்னா அது கடவுள்தான். நல்லபடியா பிள்ளையைப் பெத்து எடுக்குற வரைக்கும் கடவுளைக் கும்பிடுவதை மட்டும் கைவிட்டுற கூடாது. ஒவ்வொரு மாதத்துக்கும் என்னென்ன கடவுள்னு ஒரு லிஸ்டே இருக்கு.
வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தை பிறப்பு வரையில் (10 மாதங்கள்) அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்துக்குரிய தெய்வத்தை வணங்குவது சிறப்பு.அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் வணங்க வேண்டிய தெய்வம் எது என்று பார்க்கலாமா…
முதல் மாதத்தில் கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ் வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம். 2-வது மாதத்தில் இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்திருக்கும். செவ்வாய் அதிபதி. ஸ்ரீமுருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்க வேண்டும்.
3-வது மாதத்தில் குழந்தையின் கை, கால்கள் உருவாகியிருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 4-வது மாதத்தில் குழந்தையின் எலும்பு மற்றும் நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனாரை வணங்கினால், கரு நல்ல வளர்ச்சி பெறும்.
5-வது மாதத்தில் குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் ஸ்ரீதுர்கை அம்மனை வணங்கவேண்டும். 6-வது மாதத்தில் குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீவிநாயகரை வழிபட வேண்டும்.
7-வது மாதத்தில் பிராணன் உருவாகும். புதன் அதிபதி. ஸ்ரீவிஷ்ணுவை வணங்க வேண்டும். 8-வது மாதத்தில் கருவின் உடல் வளர்ச்சி பெருகும். ஸ்ரீவிநாயகரை வணங்க வேண்டும். 9-வது மாதத்தில் கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. ஸ்ரீகௌரி மற்றும் துர்கையை வழிபட வேண்டும்.
10-வது மாதத்தில் குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்ம காரகனான சூரியன் அதிபதி. சிவனாரை வழிபட வேண்டும். கரு உருவாகும். இதற்குக் காரக கிரகம் சுக்கிரன். ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீலட்சுமி மற்றும் இந்திராணியை வணங்கலாம்.