தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…

tamilan

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என எட்டாகப் பிரித்தான். திசையை எட்டாகப் பிரித்த தமிழன் இசையை ச ரி க ம ப த நி என ஏழாகக் கொடுத்தான்.

இசையை ஏழாக கொடுத்த தமிழன் சுவையை இனிப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு , உவர்ப்பு, துவர்ப்பு என ஆறாக பிரித்தான். சுவையை ஆறாக பிரித்த தமிழன் நிலத்தை குறிஞ்சி (மலைப்பகுதி) , முல்லை ( வனப்பகுதி) , நெய்தல் ( கடல் பகுதி), மருதம் ( நீர் மற்றும் நிலம்) , பாலை ( வறண்ட பகுதி) என ஐந்தாக பிரித்தான்.
நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன் காற்றை தென்றல், வாடை , கோடை, கொண்டல் என நான்காக பிரித்தான். கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல், தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல், மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை , வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.

காற்றை நான்காக பிரித்த தமிழன் மொழியை இயல் ( இயற் தமிழ் ), இசை ( இசைத்தமிழ்), நாடகம் ( நாடகத்தமிழ்) என மூன்றாக பிரித்தான். இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை மூன்றாக பிரித்த தமிழன் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாக வகுத்தான்.

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அக வாழ்க்கை. வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் புற வாழ்க்கை. வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன். ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான். ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் அதை உயிரினும் மேலாக வைத்தான். இதைத்தான் அய்யன் வள்ளுவர் 2 அடியில் அழகாகச் சொன்னார்.

“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”