காஷ்மீர் 1000 ஆண்டு பிரச்சனை.. இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களிடம் டிரம்ப் பேச்சுவார்த்தையா?

  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம்…

trump1

 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த கொடூர சம்பவத்தை “கேவலமான ஒன்று” என குறிப்பிட்டார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சர்வதேச சர்ச்சைக்குள்ளான காஷ்மீர் எல்லைப் பகுதியின் வரலாற்று பின்னணியை மேற்கோள் காட்டியதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் தலைவர்களையும் தான் நன்கு அறிந்தவர் எனத் தெரிவித்தார். ஆனால், அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை.

“நீங்கள் அறிந்தது போலவே, நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான நெருக்கமான நபர். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக காஷ்மீருக்காக போராடி கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனைக்கு ஆயிரம் ஆண்டுகள், அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். நேற்று நடந்த தாக்குதல் உண்மையிலேயே மோசமான ஒன்று,” என்று அவர் கூறினார்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துல்சி காபர்ட், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார்.

“இந்தியர்களை, குறிப்பாக ஹிந்துக்களை கொன்ற ஒரு கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் இது” எனக் கூறிய காபர்ட், இந்த படுகொலைக்கு தாங்கள் முழுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும், அமெரிக்காவின் முழுமையான ஆதரவு இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

“இந்த குரூரமான தாக்குதலுக்கு பிறகும், குற்றவாளிகளை தேடி பிடிக்க உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம்” எனக் கூறி, பிரதமர் மோடிக்கு கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள், பஹல்காமின் பைசாரனில் பயணித்த சுற்றுலா பயணிகள்மீது கோர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் கொடூரத் தன்மை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, மேலும் இந்தியா மற்றும் உலகத் தலைவர்கள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலைமைவில், தாக்குதலுக்குள்ளானவர்கள், இஸ்லாத்துக்கு நேர்மையாக இருக்கிறீர்களா என்று வினவப்பட்ட பின்னரே இலக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மத அடிப்படையிலான வன்முறையை தூண்டும் வகையிலான இந்த தாக்குதல், சர்வதேச அளவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.