ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. அதுவும் கோடியில் நஷ்டம்..!

By Bala Siva

Published:

 

உப்பு முதல் தங்கம் வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஈடுபட்ட ரத்தன் டாடா திரைத்துறையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் அவர் தயாரித்த ஒரே ஒரு திரைப்படமும் நஷ்டம் ஏற்பட்டது என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் டாடா நேற்று காலமான நிலையில் அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாடா குழுமம் என்றால் உப்பு முதல் அனைத்து வகையான பொருட்களின் தயாரிப்பிலும் கால் பதித்து உள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் திரைப்படத்துறையில் அதிக அளவு நாட்டம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடாவின் தாத்தா ஜாம்செட்ஜி டாடா ஒருமுறை விமானத்தில் சென்ற போது அமிதாப் பச்சன் அருகில் உட்கார்ந்திருந்தார், ஆனால் தன் அருகில் உட்கார்ந்து இருப்பவர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் என்பது அவருக்கு தெரியாது; அந்த அளவுக்கு அவருக்கு திரைப்படத்தில் ஈடுபாடு இல்லை.

அதே போல் தான் ரத்தன் டாடாவுக்கும் திரைப்படத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர் ஜடின் குமார் என்பவருடன் இணைந்து அமிதாப் பச்சன் நடித்த “ஏட்பார் ” என்ற திரைப்படத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு தயாரித்தார். ஹாலிவுட் திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 9.50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், இந்த படம் சுமார் எட்டு கோடி மட்டுமே வசூலை கொடுத்தது என்பதும் இதனால் ஒரு கோடிக்கும் அதிகமாக அவருக்கு நஷ்டம் என்றும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் திரையுலகின் பக்கம் திரும்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு சல்மான் கான், அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், போனி கபூர், சஞ்சய் தத், சுஷ்மிதா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.