பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை இடைத்தேர்தல்ல… மூத்த அரசியல்வாதி, பாரம்பரியமிக்க கட்சின்னு பழைய பெருமை பேசி என்கிட்ட மோத வராதீங்க ஸ்டாலின் சார் ! இப்போ நடக்குறது லஞ்சமில்லாத நல்லாட்சி… மக்கள் எங்க பக்கம்! எத்தனை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் அத்தனை தொகுதியிலயும் உங்க கொடியை நட்டணும்னு ஆசைப்பட்டா, எலெக்ஷன் ரிசல்ட் அன்னைக்கு உங்க முகவரி இல்லாம போயிடும், பார்த்துக்கோங்க! அரசியல்ல நீங்க சீனியரா இருக்கலாம், ஆனா மக்கள் செல்வாக்குல நாங்கதான் இப்போ கிங்

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் காய்ச்சலில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த எண்ணிக்கை…

vijay vs stalin4

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் காய்ச்சலில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த எண்ணிக்கை பத்து முதல் பதினைந்து தொகுதிகளாகக் கூட உயர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த விருப்பம் எழுந்து வருகிறது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் மக்கள் செல்வாக்கு உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவது என்பது முதலமைச்சர் விஜய் விரிக்கும் அரசியல் வலையில் விழுவதற்குச் சமம் என்றும், இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் ரிஸ்க்காக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலினை மீண்டும் சட்டமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் திருச்சி கிழக்கு தொகுதியைத் தேர்வு செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும், அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்ப வட்டாரங்கள் இதற்குச் சற்றும் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை பதினைந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் பட்சத்தில், தேர்தல் களம் ஒட்டுமொத்தமாக தவெக எதிர் திமுக என்ற மிகப்பெரிய யுத்தமாக மாறிவிடும். அப்படி நடக்கும் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் அலைக்கு முன்னால் திமுகவினால் ஈடுகொடுக்க முடியாமல் போனால், அது மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் துடைக்க முடியாத ஒரு பெரிய கறையாகவும், அவமானமாகவும் மாறிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பயப்படுகின்றனர்.

இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் திமுகவிற்குப் பல வழிகளில் அரசியல் சிக்கல்கள் காத்திருக்கின்றன. ஒருவேளை அறிவிக்கப்படும் 15 தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெற்று, துரதிர்ஷ்டவசமாக மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியிலும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு பலம்பெரும் பாரம்பரியமிக்க அரசியல் தலைவருக்குக் காலம் முழுமைக்கும் முடக்க முடியாத அவப்பெயரைத் தேடித்தரும். சரி, அப்படியே மு.க.ஸ்டாலினும் அவருடன் ஓரிருவரும் மட்டும் எப்படியோ கஷ்டப்பட்டு வெற்றி பெற்று, மீதமுள்ள 12-க்கும் மேற்பட்ட தொகுதிகளைத் தமிழக வெற்றி கழகம் அள்ளிக்கொண்டு போனால் கூட, அது ஆளுங்கட்சியின் அசுர பலத்தையே காட்டும் என்பதால் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு அதுவும் ஒரு வகையான தோல்வி மற்றும் அவமானமாகவே கருதப்படும்.

இந்தச் சூழலில், மு.க.ஸ்டாலின் தனது அரசியல் அந்தஸ்தையும், கௌரவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்றால், இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலாவது திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்; அதோடு அவரும் சொந்தத் தொகுதியில் பிரம்மாண்ட வாக்குகளுடன் ஜெயிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவருக்குப் பெருமை சேர்க்கும். ஆனால், தற்போதைய அரசியல் எதார்த்தங்களை உற்றுநோக்கும்போது, இந்த இமாலய வெற்றி என்பது தற்போதைய காலகட்டத்தில் திமுகவிற்குச் சாத்தியமே இல்லை என்று நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் மற்றும் விபரமறிந்த அரசியல் முக்கியஸ்தர்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு மிக முக்கியமான காரணம், முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதும், அவரது தற்போதைய புதிய அரசு மீதும் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும், காட்டும் பேராதரவும்தான். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் லஞ்சமில்லாத நிர்வாகம், கோப்புகள் விரைந்து முடிவடைவது என மக்கள் நேரடியாக உணரும் வகையில் பல நன்மைகளை தவெக அரசு செய்து வருவதால், விஜய்க்கு இருக்கும் மவுசும் செல்வாக்கும் இன்னும் துளிகூடக் குறையாமல் அப்படியே நீடிக்கிறது. இதனால், எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தாலும், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தவெக பக்கமே இருக்கும் என்பதால், அந்தத் தொகுதிகள் அனைத்திலும் தமிழக வெற்றி கழகமே அசுரத்தனமான வெற்றியைப் பெறும் வாய்ப்புகள் மிக பிரகாசமாகத் தென்படுகின்றன.

எனவே, ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தோடு இருக்கும் ஒரு பலம்பெரும் மூத்த அரசியல்வாதியான மு.க.ஸ்டாலின், இந்த நேரத்தில் அவசரப்பட்டு விஜய் விரிக்கும் தேர்தல் வலையிலோ அல்லது சொந்தக் கட்சியினரின் உணர்ச்சிவசப்பட்ட கோரிக்கைகளிலோ விழுந்துவிடக் கூடாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்களாம். இப்போதைய சூழலில் மீண்டும் களமிறங்கி அரசியல் எதிர்காலத்தைச் சூதாட்டமாக்குவதை விட, இன்னும் ஐந்து ஆண்டுகள் பொறுமையாக இருந்து, மக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கை மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டு அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திப்பதே புத்திசாலித்தனம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வருவதாக நம்பத்தகுந்த பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன.