இந்திய பங்குச்சந்தை: இதுவரை இல்லாத நீண்ட இழப்பு.. தொடர்ந்து 10வது நாளாக சரியும் நிப்டி..

  இந்திய பங்குச் சந்தை மேலும் ஒரு மோசமான நாளை இன்று சந்தித்தது. குறிப்பாக நிப்டி தொடர்ந்து 10வது நாளாக சரிந்து, இதுவரை இல்லாத நீண்ட இழப்பை பதிவு செய்தது. இன்று மட்டும் நிப்டி…

share 1280 1

 

இந்திய பங்குச் சந்தை மேலும் ஒரு மோசமான நாளை இன்று சந்தித்தது. குறிப்பாக நிப்டி தொடர்ந்து 10வது நாளாக சரிந்து, இதுவரை இல்லாத நீண்ட இழப்பை பதிவு செய்தது. இன்று மட்டும் நிப்டி 37 புள்ளிகள் சரிந்து 22,083-ல் முடிவடைந்தது, அதேபோல் சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 72,990-ல் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் நிப்டி வங்கி ஓரளவு உயர்ந்தது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் HDFC பேங்க் ஆகிய முக்கிய பங்கு வாங்குதலால் 131 புள்ளிகள் உயர்ந்து 48,245-ல் முடிந்தது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே பங்குகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால் ஆட்டோ துறை தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. குறிப்பாக Bajaj Auto & Hero MotoCorp 52 வார குறைந்த நிலையை எட்டியது.

India Cements பங்குகள் 15% உயர்ந்தது என்பதும், Swiggy மற்றும் Zomato பங்குகள் உயர்வு பெற்றது. ஆனால் Adani Green, Supreme Industries, Paytm, Jubilant Foodworks மற்றும் Coromandel International ஆகியவை பெரும் சரிவை இன்று சந்தித்தன