தற்போது உள்ள விதிகளின்படி, 12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்த அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே CPL பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு 1990களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே பைலட் பயிற்சி தொடங்க இயலும். ஆனால் தற்போது மீண்டும் 12ஆம் வகுப்பில் எந்த பிரிவில் படித்திருந்தாலும் பைலட் ஆகலாம் என்ற நிலை உருவாகவுள்ளது.
இதுகுறித்து விமானத்துறை முன்னணி நிபுணரான கெப்டன் சக்தி லும்பா கூறியபோது, எந்த நாட்டிலும் பைலட் ஆவதற்கு இயற்பியல், கணிதம் தேவை என்ற நிலை இல்லை என்றும், பைலட்டாக செயல்பட தேவையான அறிவியல் அறிவு மாணவர்கள் அடிப்படை பள்ளி நிலைகளிலேயே பெறுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். எனவே 12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது காலத்தைத் தாண்டிய விதி,” எனக் கெப்டன் லும்பா தெரிவித்துள்ளார்.
விமான பயிற்சி நிறுவனங்கள் இந்த விதியை நீண்ட நாட்களாக விமர்சித்து வருகின்றன. “தனியார் பைலட் லைசன்ஸ் (PPL) பெறுவதற்கு இந்தத் தகுதிகள் தேவையில்லை; அதனால் CPL-க்கு ஏன் அவசியம்?” என அவர்கள் கேட்கிறார்கள்.
“இது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமற்றது,” என ஒரு விமான பயிற்சி பள்ளியின் தலைவர் தெரிவித்தார். “அறிவியல் அல்லாத பிரிவில் உள்ள மாணவர்களின் கனவுகளை இது தடுத்து விடுகிறது என்றும் கூறுகின்றன.
இந்திய விமானத்துறை வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அதிகபட்சமாக பயிற்சி பெற்ற பைலட்டுகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில், DGCA, பயிற்சி தரத்தை மதிப்பீடு செய்ய புதிய தகுதி குறியீட்டையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் ஆர்ட்ஸ் குரூப் படித்த மாணவர்களும் பைலட்டாக கனவு காண முடியும். அறிவியல் பாடங்களை மீண்டும் படிக்க தேவையில்லை. புதிய பைலட்டுகள் அதிகரித்து ஏர்லைன் துறையின் தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது.