அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!

  நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…

adhikari

 

நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்த அதிகாரி (Adhikari) என்பவர், TCS நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது மனைவி சோஹினி அதிகாரி மற்றும் மூன்று வயதுடைய குழந்தையுடன் குடும்ப விடுமுறைக்காக காஷ்மீரின் இயற்கை அழகைக் காண சுற்றுலாவுக்கு வருகை தந்திருந்தார். ஆனால், இந்த பயங்கரமான வன்முறைச் சம்பவம், அவர்களின் மகிழ்ச்சியான பயணத்தை ஒரு துயர கனவாக மாற்றியது.

இந்த தாக்குதலில், அதிகாரி துப்பாக்கி குண்டுக்கு பலியானதால் குடும்பத்தை பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. தனது கணவனை இழந்த சோஹினி அதிகாரி, தன் சோகத்தைக் வெளிப்படுத்தியுள்ளார். அவரது கணவர் தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்தவர் என்றும் நிறுவனத்தில் ஒரு நல்ல ஊழியர் என்றும் கூறினார்.

பஹல்காமில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இதயம் பதறவைக்கும் தாக்குதல், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதைக் குறிக்கிறது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதேநேரம், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரமான தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காரணம் என கூறப்படுகிறது.

இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி வினய் நர்வாலும், நேற்று பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்பது சோகமாக செய்தியாகும்.