சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!

  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்றுஅகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 79 வயதான…

pc

 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்றுஅகமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 79 வயதான முன்னாள் நிதி அமைச்சர், ப.சிதம்பரம், அதிக வெப்பத்தினால் சோர்வடைந்து மயங்கி இருக்கலாம் என PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சமூக ஊடக தளமான X-இல் தனது தந்தை நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ‘என் தந்தைக்கு, அதிக வெப்பம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மயக்கம் ஏற்பட்டது என்றும், தற்போது அவர் ஜைடஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை இயல்பாக உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம் மயங்கி விழுந்ததும், அருகிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அவரை துரிதமாக ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஆசிரமத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

சபர்மதி ஆசிரமத்திற்கு வருவதற்கு முன் ப. சிதம்பரம் சர்தார் வல்லப்பாய் படேல் தேசிய நினைவகத்தில் நடந்த காங்கிரஸ் பணிசெயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.