இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளை விடுத்து ‘வக்ஃப் திருத்த சட்டம் 2025’க்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான, இருள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் ‘Batti Gul’ (Lights Off) என அழைக்கப்படுகிறது, அதாவது, நாட்டு மக்கள் தங்கள் வீடு, கடை, அலுவலகங்களில் விளக்குகளை 15 நிமிடங்களுக்கு அதாவது இரவு 9 மணி முதல் 9.15 மணி வரை அணைக்க வேண்டும். இதுகுறித்து AIMPLB தனது அறிக்கையில், இந்த சட்டத்தை சமூக நலனுக்கேற்ப அமைதியான முறையில் எதிர்த்துப் போராட அழைப்பு விடுத்துள்ளளோம், ‘வக்ஃஃப் காப்போம் அரசியலமைப்பை காப்போம்’ என தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தை எதிர்ப்பது வெறும் மதம் சார்ந்ததல்ல, நாட்டின் நலனுக்கானது, நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொது பிரச்சனை என AIMPLB தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இதில் துணிவுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம் வெற்றிபெற, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் பகிர வேண்டுமெனவும், ஊடகங்கள் மற்றும் பிரபல நபர்களை குறிக்குமாறு (tag) கூறப்பட்டுள்ளது.
வக்ஃப் திருத்த சட்டம் 2025, முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் சொத்துகள் நிர்வாகத்தில் சேர்க்கும் விதியை கொண்டுள்ளது. இது முஸ்லிம் சமய சொத்துகளின் மீதான அரசு தலையீட்டை அதிகரிக்கும் என்றும், மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கிய எதிர்ப்பு நடவடிக்கைகள்:
– AIMPLB: ‘Batti Gul’ போராட்டத்தை முன்னெடுத்து, குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளது.
– AIMIM மற்றும் AIMPLB: உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இடைக்கால தீர்ப்பு மே 5, 2025 அன்று வழங்கப்படும்.
– AIMIM தலைவர் அசதுதீன் ஓவைசி ஹைதராபாத்தில் பெரிய பேரணியை நடத்தினார்.
– ஜமியத்துல் உலமா-ஏ-ஹிந்த், இமாரத்-ஏ-ஷரியா, முஸ்லிம் யூத் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் பல நகரங்களில் போராட்டம் நடத்தின.
– தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில், தமிழக வெற்றி கழகம் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டனத்தை நடத்தியது.
இந்த நிலையில் இந்த சட்டம் வக்ஃப் சொத்துகள் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்றும், ஊழலை கட்டுப்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. அமைச்சர் அமித்ஷா, இந்த நியமனங்கள் நிர்வாக நோக்கத்தில் மட்டுமே செய்யப்படும், மத சம்பந்தப்பட்டவை அல்ல என விளக்கியுள்ளார்.