இந்தியா அமைக்கும் ரகசிய சுரங்கப்பாதை.. பாகிஸ்தான் அதிர்ச்சி.. சுரங்கப்பாதை மட்டும் முடிந்துவிட்டால் பாகிஸ்தான் கதி அவ்வளவு தான்.. ஒரு துப்பாக்கி குண்டு கூட பயன்படுத்தாமல் பாகிஸ்தானை பழிவாங்கிய இந்தியா.. இனி பாகிஸ்தான் என்ற எதிரியே இல்லாமல் போய்விடும்…!

2025 மே 7 அன்று, இந்திய விமான படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இரகசிய திட்டம்…

india vs pakistan

2025 மே 7 அன்று, இந்திய விமான படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இரகசிய திட்டம் செயல்பட தொடங்கியது.

இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஆழமாக பறந்து சென்று, ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் 11 இராணுவ தளங்களை துல்லியமாக தாக்கி அழித்தன. பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் ரஃபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒரே இரவில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதாக உலகம் நம்பியது. ஆனால், இந்தியா பெரிய இரகசிய திட்டத்தை வைத்திருந்தது. பாகிஸ்தான் தங்கள் ‘போலி வெற்றியை’ சாலையில் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, இந்தியா சிந்து நதிகளின் குறுக்கே இரண்டாவது ‘புல்லட்’ ஆயுதத்தை உருவாக்க தொடங்கியது.

இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது சிந்து நதியின் ஒவ்வொரு துளி நீரையும் பாகிஸ்தானை நோக்கி செல்லாமல் திசை திருப்புவதற்கான ஒரு மெகா சுரங்க பாதை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த இரகசிய திட்டத்தைக் கண்டறிந்த பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கொதித்தெழுந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் உறுதியான குரலில், “சிந்து நதியில் இருந்து ஒரு துளி நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அறிவித்தார்.

இந்தியா அணைகள் மட்டுமின்றி இரகசிய சுரங்கங்களையும் அமைப்பதால், பாகிஸ்தான் மிக விரைவில் வறண்டு பாலைவனமாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தாலும், இந்தியா அதை கண்டுகொள்ளவில்லை.

பாகிஸ்தானின் நிலப்பரப்பு, விவசாயம், மின்சாரம் மற்றும் குடிநீர்த் தேவையில் 80% சிந்து நதி அமைப்பையே சார்ந்துள்ளது. இந்த நதி அமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய ஆறு பெரிய நதிகள் உள்ளன. பாகிஸ்தான் இவற்றை தங்கள் இரத்த நாளங்கள் என்று அழைக்கிறது.

பாகிஸ்தானின் 16 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு 93% நீர் இந்த நதிகளிலிருந்து தான் கிடைக்கிறது. விவசாயம், நாட்டின் பொருளாதாரத்தில் 25% பங்களிக்கிறது. மங்கலா (Mangla), தர்பேலா (Tarbela) போன்ற அணைகள் இந்த நீரை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. நதிநீர் ஓட்டம் நிறுத்தப்பட்டால், சில வாரங்களிலேயே பயிர்கள் கருகும், மின்சாரம் துண்டிக்கப்படும், தொழிற்சாலைகள் நிற்கும். இதனால் தான் இந்த நதிகளை இந்தியா தொட்டால் பாகிஸ்தான் பதறுகிறது.

இந்தியா நீரை நிறுத்திவிடுமோ என்ற பயத்தில், பாகிஸ்தான் 1960-ல் அமெரிக்கா மற்றும் உலக வங்கி உதவியுடன் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தது. கிழக்குப் பகுதி நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவுக்கும், மேற்கு பகுதி நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவை பெரும்பாலும் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.

பிரிவினையின் வலிகள் இருந்தபோதிலும், இந்தியா அமைதியை விரும்பியது. ஆனால், பாகிஸ்தான் 1965, 1971, கார்கில் போன்ற பல போர்களிலும், தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் மூலமும் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டது. எனினும், இந்தியா ஒப்பந்தத்தை மதித்து தொடர்ந்து நீரை வழங்கியது.

2014-ல் மோடி பிரதமரான பிறகு நிலைமை மாறியது. சமீபத்திய பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்குக் கடிதம் அனுப்பியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்” என்று இந்தியா அறிவித்தது. ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட மறுநாள், ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல், “பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாது” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் தான் இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், ஒரு இரகசிய மெகா கால்வாய் மற்றும் சுரங்க திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியது. இது இந்தியாவின் அமைதியான பழிவாங்கல். சிந்து – யமுனா இணைப்பு சூப்பர் கால்வாய் என்ற பெயரில் உருவாகும் இந்த சுரங்கப்பாதை சவாலான மலைகளுக்கு கீழே 50 அடி அகலமுள்ள 12 பெரிய சுரங்கங்கள் உட்பட, பஞ்சாபில் 200 கி.மீ. நீளமுள்ள மெகா கால்வாய் ஒன்று இரகசியமாக அமைக்கப்பட்டது.

மேற்கு நதிகளான செனாப் மற்றும் ஜீலம் ஆறுகளிலிருந்து வரும் நீர், இந்த சுரங்கங்கள் வழியாக வேகமாக பாய்ந்து, பியாஸ் மற்றும் சட்லஜ் நதிகளுடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து ஹரிகே பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

இந்திரா காந்தி கால்வாய் வழியாக ராஜஸ்தானின் பாலைவனத்திற்கு நீர் கிடைக்கிறது. பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள சட்லஜ் மற்றும் பியாஸ் நீரால் இந்த மாநிலங்களின் விவசாய நிலங்கள் செழிக்கின்றன. கூடுதல் நீர் கங்கை கால்வாய் வழியாக யமுனையை அடைந்து, யமுனா நதியை புதுப்பித்து, டெல்லிக்கு குடிநீரை உறுதி செய்கிறது.

மேலும் வெள்ளம் கட்டுப்படுத்தப்படும், நிலத்தடி நீர் உயரும், மின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த நீரின் அதிகப்படியான உபயோகம் சரஸ்வதி நதி மீண்டும் ஓடலாம் என்ற கனவையும் தூண்டியுள்ளது.

மொத்தத்தில் பாகிஸ்தான் தண்ணீர் பஞ்சம், மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல் ஆகிய சிக்கல்களால் கராச்சி போன்ற பெரிய நகரங்கள் இரவில் இருளில் மூழ்கும். மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்தியா, போர் முனையில் மட்டுமல்ல, புவியியல் ரீதியாகவும், ஒரு துப்பாக்கி குண்டு கூட செலுத்தாமல் பாகிஸ்தானை பெரிய அளவில் தண்டித்துள்ளது.