ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன்: உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசிய பிரதமர்..!

  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என…

modi

 

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலா பயணிகளுக்கெதிராக நடைபெற்ற பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டார். ஒரு பயங்கரவாதியையும் விட மாட்டேன் என கூறிய மோடி, தனது எச்சரிக்கையை உலகமே கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசினார்.

பீகார் மாநிலம் மதுபனியில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது உரையை இந்தியில் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். இதன் மூலம், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் போராட்டத்தை உலகளாவிய அளவில் வலியுறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்பட்டார் என கூறப்படுகிறது.

“இன்று பீகார் மண்ணிலிருந்து உலகம் முழுக்க இந்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். இந்தியா ஒவ்வொரு தீவிரவாதி மற்றும் அவர்களது ஆதரவாளர்களையும் அடையாளம் காணும், தேடி கண்டுபிடித்து தண்டிக்கும். அவர்களை இந்த பூமியின் எந்த எல்லையில் இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிப்போம்.

நீதியை நிலைநிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான தீர்மானத்தில் இந்தியா முழுவதும் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் எங்களுடன் இருக்கின்றனர். பல நாடுகள் மற்றும் அவர்களது தலைவர்கள் எங்களுடன் நின்றமைக்கு நன்றி கூறுகிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்நிகழ்வை ஆரம்பிப்பதற்கு முன், பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பான பிரதமரின் முக்கியமான கருத்துகள் குறித்து வெளிநாட்டு விவகார அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது சமூக வலைதளத்தில், “தீவிரவாதம் தண்டனையின்றி விடப்படாது. நீதிக்காக அனைத்தும் செய்யப்படும். இந்தத் தீர்மானத்தில் இந்தியா முழுமையாக உறுதி கொண்டிருக்கிறது,” என பதிவிட்டார்.

https://x.com/PTI_News/status/1915310599107666404