மிகவும் துயரமான நிகழ்வாக, பிரபல Content Creator மிஷா அகர்வால், தனது 25வது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். இந்த துயரச் செய்தியை அவரது குடும்பத்தினர், மிஷாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமான அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தினர்.
உற்சாகமான தன்மையும், அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய Content Creator மிஷா, டிஜிட்டல் உலகத்தில் மிகவும் பிரபலமானவர். அவரது திடீர் மறைவு இணையத்தையே அதிர்ச்சி அடைய செய்தது, ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மற்ற Content Creatorகள் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மிஷா அகர்வாலின் மறைவு குறித்து இந்தக் கசப்பான செய்தியை பகிர்வது நம் இதயத்தை மிகவும் வலிக்க செய்கிறது. அவர் மீது நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்றுக்கொள்வது எங்களுக்கே கடினமாக இருக்கிறது. தயவுசெய்து அவர் உங்கள் நினைவில் என்றும் இருக்கட்டும்,” என தெரிவிக்கப்பட்டது.
இந்த இழப்பு நம்மால் விளக்க முடியாத ஒன்று. எங்களிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள்’ என்று மிஷாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்த பதிவு வெளியான பிறகு, மிஷாவின் சகோதரி முக்தா அகர்வால் கமெண்ட் செய்து,
“நண்பர்களே, இந்த செய்தியை உங்களுடன் பகிர்வது நியாயம் என்று நாங்கள் நினைத்தோம். இப்போது எங்களுக்கு மிஷாவின் மறைவு குறித்து விவரிக்க கூடிய மனைநிலை நிலை இல்லை. தயவுசெய்து உங்களது நலனைக் கவனிக்கவும்,” என கூறினார்.
இந்த செய்தி வெளியாகிய பிறகு, பலரும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து, இந்த துயரச் செய்தியை ஏற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருவரோ,
“இது மனதை நொறுக்கும். மிஷா மிகவும் திறமையானவர், கடுமையாக உழைத்தவர். அவரது குடும்பம் எவ்வளவு வேதனையில் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. அன்பும், மன உறுதியும் அனுப்புகிறேன்,” என்று எழுதினார்.
மற்றொருவர், “மிகவும் வேதனையாக இருக்கிறது. மிஷா, உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்று தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓய்வெடுங்கள்’ என்று பகிருந்துள்ளார்.
இன்னொருவர், “என்ன இது…!!! இப்போது தூங்கி எழுந்து இன்ஸ்டா திறந்தவுடனே இதைக் காண்கிறேன்… நம்பவே முடியவில்லை. அவர் குரல் என் மனதில் ஒலிக்கிறது. ஆன்மா சாந்தி பெறட்டும்,” என்று கூறினார்.
மிஷாவின் குடும்பம், அவரது மறைவின் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை, மேலும் தனிப்பட்ட தன்மையை மதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.