40 வயதைத் தாண்டினால் அஜீரணக்கோளாறு வந்து விடும். பலருக்கு நீண்டநாளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். மலட்டுத்தன்மை தான் காரணமா சொல்வாங்க. அதே மாதிரி இந்த சைனஸ் பிரச்சனை சிறுவர்களுக்கே வந்து விடுகிறது. பாடாய் படுத்தும் இந்தப் பிரச்சனைகளுக்கு என்னதான் வழி? வாங்க பார்க்கலாம்.
லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி -1 டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன், சுடு தண்ணீர் – 2 டீஸ்பூன் சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும் லவங்கப் பவுடர் 2 மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்
சுத்தமான தேன் – ஒரு மேஜைக்கரண்டி, லவங்கப்பட்டை பவுடர் – 1 டீஸ்பூன் கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், 2 வாரங்களில் முகப்பரு மறைந்து விடும். லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்.
சூடான தேன் – ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர் – 4 டீஸ்பூன் கலந்து, காலை, மாலை என, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும். லவங்க பவுடர், தேன் – தலா 1 டீஸ்பூன் கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் 3 வேளை பூசினால், வலி நீங்கி விடும்
வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்சினை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம். தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்.
தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். லவங்க பவுடர் – ஒரு சிட்டிகை, தேன் – அரை டீஸ்பூன் கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.