எனக்கு கடவுள் ராஜ்கிரண் சார் மட்டும் தான்… வேறு யாரும் இல்லை… வடிவேலு ஓபன் டாக்…

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு. பிறகு நடிகர்…

vadivelu

வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு.

பிறகு நடிகர் விஜய்காந்த் வடிவேலுவை பல திரைப்படங்களுக்கு பரிந்துரைத்து தூக்கி விட்டார். தனது அசாத்தியமான நகைச்சுவை மற்றும் உடல் மொழியின் மூலம் மிகவும் பிரபலமானார் வடிவேலு. இவரை வைகைப்புயல் என்றும் அழைக்கின்றனர்.

எந்த கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை சிரிக்க வைப்பதில் வடிவேலு தவறுவதில்லை. இவரது நடிப்புக்கு சான்றாக பல திரைப்படங்கள் இருக்கிறது. முன்னணி நடிகர்கள் பலர் படத்திலும் நடித்திருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் தற்போது ஒரு நேர்காணலில் வடிவேலு அவர்கள் தன்னுடைய சினிமா கடவுள் யார் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.

வடிவேலு கூறியது என்னவென்றால், ரொம்ப நாட்களாக இந்த விஷயத்தை நான் பேச வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். சினிமாவில் எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து வாழ வைத்தது ராஜ்கிரண் சார் மட்டும்தான். நான் ரொம்ப நாளா அவருடைய ஆபீஸில் தான் தங்கி படத்திற்கு வாய்ப்புக்கு தேடிக் கொண்டிருந்தேன். சின்ன கவுண்டர் படத்தில் வெறும் குடை பிடிக்கும் கேரக்டர் தான். பின்னர் தேவர் மகன் படம் தான் என்னை தூக்கி விட்டது. அப்படி என்னை வாழ வைத்த கடவுள் ராஜ்கிரண் சார் மட்டும்தான் வேறு யாருமில்லை என்று கூறியிருக்கிறார் வடிவேலு. ஏற்கனவே ரசிகர்கள் வடிவேலு விஜயகாந்த்தை மறந்துவிட்டார் வாய்ப்பு வாங்கி கொடுத்தவரையே தூக்கி வீசிவிட்டார் என்று பேசியதற்கு பதிலடி கூறும் விதமாக இப்படி கூறியிருக்கிறார் வடிவேலு என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகிறது.