நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வல்லவன், பில்லா, வில்லு, யாரடி நீ மோகினி, இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நயன்தாரா.
2010 காலகட்டத்திற்கு பிறகு நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், நெற்றிக்கண்,கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தையும் பெற்றார் நயன்தாரா. தற்போது பலப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவிருக்கிறார். நயன்தாரா, சுந்தர் சி மற்றும் வேல்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்து ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுக்கும் சுந்தர் சி அவர்களுக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டதாகவும் சுந்தர் சி கோபப்பட்டு இந்த படத்தை எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றதாகவும் செய்திகள் வெளியாயின. அதைப்பற்றி தற்போது ஒரு நேர்காணலில் சுந்தர் சி அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சுந்தர் சி எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஏன் இந்த செய்தி பரவியது என்று தெரியவில்லை. அவர் ஒரு டெடிகேட்டடான ஆர்டிஸ்ட். ஒரு அரை மணி நேரம் கேப் இருந்தால் தான் அவரை கேரவேனுக்கு நான் போக சொல்லுவேன். இல்லையென்றால் லொகேஷனில் இருப்பது தான் அவருடைய வழக்கமான விஷயம். தேவை இல்லாமல் பரவும் வதந்திகளுக்கு பதில் கூறிக்கொண்டு இருக்க முடியாது என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சுந்தர் சி.