பிக் பாஸ் 8: சுனிதா இடத்துல நான் இருந்திருந்தா… கேர்ள்ஸ் டீம் முடிவால் கடுப்பான சவுந்தர்யா..

By Ajith V

Published:

Soundhariya vs Sunitha : தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியி்ன் பெண்கள் அணியில் ஒவ்வொருவரும் தனித்தனியாக மிகச் சிறப்பாக ஆடினாலும் ஒன்றாக ஆடும் போது நிறைய பிரச்சனைகள் இருந்து வருவதை நிச்சயம் மறுக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் அணியில் ஒரு சிலர் ஒட்டாமலும் ஒட்டியும் இருப்பதால் ஆண்கள் அணியை போல ஒரு ஒரு குழுவை அவர்களால் அமைக்க முடியாமல் திணறித் தான் வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இருவர் மாறி மாறி வீட்டில் இருக்க வேண்டும். அந்த வகையில் முதல் வாரம் பெண்கள் வீட்டில் இருந்து ஆண்கள் வீட்டிற்கு ஒருவர் செல்வதிலேயே ஜாக்குலினுக்கும், பவித்ராவிற்கும் அதிக மோதல் இருந்தது. இப்படி வாரத்திற்கு ஒரு பிரச்சனை பெண்கள் அணிக்குள் நடந்துவிடும் என் சூழலில் கடந்த சில தினங்களாக சௌந்தர்யாவின் செயல்பாடுகள் மீது பலரும் அதிருப்தியிலும் இருந்து வருகின்றனர். சாச்சனா மற்றும் அன்ஸிதா ஆகியோருக்கு இடையே நடந்த சாப்பாட்டு பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருந்தது.

இதற்கு மத்தியில் தான் தனக்கு கிடைத்த பாயாசத்தை தாண்டி ஆனந்தி மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் பாயாசத்தையும் சேர்த்து குடித்ததாக சவுந்தர்யா மீது பழி சுமத்துகிறார் சுனிதா. ஆனால் இதில் பெரிதாக உடன்பாடு இல்லாது போல் இருக்கும் சௌந்தர்யா, அதில் தப்பு ஒன்றும் இல்லை என்றும் ஆனந்தியிடமும் தர்ஷாவிடமும் மன்னிப்பு கேட்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார். இதனால் சௌந்தர்யா மீது பெண் போட்டியாளர்கள் சிலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

சௌந்தர்யா உணவை யாரிடமும் கேட்காமல் உரிமையாக எடுத்து உண்பது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தாலும் இன்னொரு புறம் அவரை டாஸ்க் விளையாட அனுமதிக்கவே இல்லை என்பதும் அவரின் குற்றமாக உள்ளது. தனக்கு எந்த விஷயத்திலும் சரியாக பங்களிப்பு கொடுக்காத பெண்கள் அணி கொடுக்க தவறுவதாக சௌந்தர்யா குற்றம் சுமத்தி இருந்தார்.

இதனிடையே, சமீபத்தில் அதன் சிறந்த உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது. ஷாப்பிங் டாஸ்க்கில் சுனிதா ஆடிய போது அவரால் நினைத்த தொகையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இது பற்றி ரஞ்சித்திம் பேசும் சௌந்தர்யா, “இப்ப டாஸ்க்ல சுனிதா என்ன பண்ணிட்டாங்க. நான் அந்த பால் கேம்ல கயிற புடிச்சிட்டு நிக்கிறதுக்கே ரொம்ப யோசிச்சு தான் கொடுத்தாங்க.

எனக்கான விஷயத்த கேட்டு கொடுக்கிறதுக்கு ஏதோ பிச்சை போடுற மாதிரி பாக்குறாங்க. ஆனா சுனிதா இப்ப என்ன பண்ணிட்டாங்க. ஒரு பாயிண்ட் கூட ஒழுங்கா எடுத்துக் கொடுக்கல. இதுவே சுனிதா எடத்துல நான் இருந்திருக்கணும். என்ன தூக்கி போட்டிருப்பாங்க” என்று சௌந்தர்யா கூறுகிறார்.

வுந்தர்யா சொன்னது போலவே சுனிதா ஷாப்பிங் டாஸ்கில் ஒரு பாய்ண்ட் கூட எடுக்காமல் இருந்த போதும் மற்ற பெண் போட்டியாளர்கள் எதுவும் சொல்லவில்லை. இதுவே அந்த இடத்தில்வுந்தர்யா இருந்திருந்தால் நிச்சயம் அது பெரிய பிரச்சனையாகி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.