சிவகார்த்திகேயன் அண்ணா எப்போவும் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லுவார்… நடிகர் தர்ஷன் ஓபன் டாக்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது…

sk

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் ஒரு நேர்காணலில் சிவகார்த்திகேயனைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் சிவகார்த்திகேயன் அண்ணா எப்போதுமே ரொம்ப என்கரேஜ் ஆக பேசுவார். நான் படம் பண்ணுவதைப் பற்றி நிறைய விஷயங்கள் அவரிடம் டிஸ்கஸ் பண்ணுவேன். அப்போது அவர் எப்போதுமே சொல்லக்கூடிய வார்த்தை என்னவென்றால் நன்றாக கடின உழைப்பை போடு நீ அதில் வெற்றி பெற்றால் அதை அனுபவி ஒருவேளை தோற்றுவிட்டாலும் மீண்டும் கடினமாக உழைத்து எப்படி மேலே வரலாம் என்று பார் என்று தான் அடிக்கடி என்னிடம் கூறுவார் என்று பகிர்ந்து இருக்கிறார் நடிகர் தர்ஷன்.