Siragadikka Aasai: விஜயாவை வெளியே போக சொல்லும் மனோஜ்.. ரோகிணி தாயத்து தான் பலித்ததா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடு மிகுந்த திருப்பங்களுடன் எமோஷனல் காட்சிகளை கொண்டிருந்தது.அண்ணாமலை கையில் கட்டியிருந்த தாயத்தை அவிழ்க்க வேண்டும் என்று விஜயா,   கூறுகிறார். அதற்கு பதிலாக…

sa3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடு மிகுந்த திருப்பங்களுடன் எமோஷனல் காட்சிகளை கொண்டிருந்தது.அண்ணாமலை கையில் கட்டியிருந்த தாயத்தை அவிழ்க்க வேண்டும் என்று விஜயா,   கூறுகிறார். அதற்கு பதிலாக அண்ணாமலை, “எதற்காக இப்படி பதறுகிறாய்? இது என்ன தாயத்து?” என்று கேட்கிறார்.

அப்போது, “இந்த தாயத்து உங்கள் கையில் இருந்தால், நீங்களும் நானும் பிரிந்து விடுவோம்” என உளறி அதன் பின்னர் சமாளித்து, “மனோஜ்க்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக இந்த தாயத்தை கட்டினேன்” என விஜயா கூறுகிறார். இதைக் கேட்டதும் பதறிய முத்து, அண்ணாமலையின் கையிலிருந்த தாயத்தை அவிழ்க்கும்  காட்சி வருகிறது.

அதன் பின் மனோஜ் வந்தவுடன், விஜயா அவரை தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அந்த தாயத்தை கட்டுகிறார். “இந்த தாயத்து இருந்தால் உன்னுடைய உடலுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது” என்று கூறுகிறார்.

அதன்பின் ரோகிணி, “நானும் ஒரு தாயத்தை கொண்டு வந்திருக்கிறேன். இந்த தாயத்தை கட்டினால், நீ பிசினஸில் பெரிய ஆளாக வருவாய்” என்று கூறி மனோஜின் இன்னொரு கையில் தாயத்தை கட்டி விடுகிறார்.

இந்த நிலையில் முத்துவுக்கு தாயத்தின் மீது ஒரு சந்தேகம் வருகிறது. மனோஜ் மற்றும் ரோகிணி ஆகிய இருவரையும் பிரித்து வைத்திருக்கும் அம்மா, எப்படி குழந்தை பிறக்க வேண்டும் என்று தாயத்தை வாங்கி வருகிறார் என்ற சந்தேகத்தை முத்து கூற, மீனாவும் அதை ஆதரிக்கிறார்.

இந்த நிலையில் முருகன், முத்துவை தான் வாங்க போகும் வீட்டை காண்பிக்க அழைத்துச் செல்கிறார். “என்னுடைய காதலியும் இப்போது வருவார்; உங்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று கூறுகிறார். அப்போது வித்யாவும் மீனாவும் அங்கே வர, அவர்களை பார்த்து முத்து ஆச்சரியப்படுகிறார். முத்து, முருகனை பார்த்து மீனாவும் ஆச்சரியப்படுகிறார். இருதரப்பும் மாறி மாறி பேசும் சூழ்நிலையில், வித்யாவை பார்த்து முத்து இந்த பொண்ணு பிராடு, இந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணாதே” என்று கூறுகிறார்.

இதற்கு மீனா, “வித்யா நல்ல பொண்ணு தான்; ரோகிணி செய்த தவறுக்கு வித்யா என்ன செய்வார்?” என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். முடிவில், முருகனையும் வித்யாவையும் மீண்டும் சேர்க்க முத்து, மீனா ஒத்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் வீட்டில் சூடான அயன்பாக்ஸில் மனோஜ் கை வைத்து அலறும்போது ரோகிணியை விஜயா திட்டுகிறார், என் பையனை கொலை செய்ய பாக்குறீயா என்று கூறுகிறார். அப்போது மனோஜ், “எதற்காக இப்படி கத்துறீங்க? வெளிய போங்க” என்று கூற, அதிர்ச்சி அடையும் விஜயா, “என்னய்யா வெளியே போக சொன்னா?” என்று கேட்கிறார். மனோஜ், “உங்களை என்ன வீட்டிலிருந்தா வெளியே போக சொன்னேன், ரூமில் இருந்து தானே வெளியே போக சொன்னேன் என்று கூற அதனையடுத்து விஜயா அழுதுகொண்டே ஹாலில் வந்து புலம்புகிறார். அண்ணாமலை, முத்து, ரவி அனைவரும் ஏன் அழுகுறீர்கள் என்று கேட்க, ‘மனோஜ் என்னை வெளியே போக சொல்லிட்டான்’ என்று விஜயா கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

இந்நிலையில், நாளைய ப்ரோமோவில் சிந்தாமணி, விஜயாவிடம், “உங்கள் மகன் இன்கம்டேக்ஸ் அதிகாரி போல வந்து என் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துட்டான் என்று  கூற விஜயா அவர் மீது கோபப்படுகிறார். நீங்க மீனாவிடம் இருந்து பணத்தை பிடுங்கி அவளை காய்ப்படுத்துவிங்களா?  இந்த மாதிரி ரவுடித்தனம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். இனிமேல் இங்கே டான்ஸ் கிளாசுக்கு வராதீர்கள்” என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் இவ்வாறு சீரியலில் திருப்பங்கள் தொடர்கின்றன. நாளைய எபிசோடு எப்படி இருக்கும் என்பதை பார்க்க நாமும் காத்திருக்கலாம்!