பிக் பாஸ் 8: ஆனாலும் இது ரொம்ப ஓவர்.. பெண்கள் அணியை டார்கெட் செய்து முத்துக்குமரன் சொன்ன விஷயம்..

By Ajith V

Published:

Muthukumaran and Sunitha : பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த ஒரே ஒரு டாஸ்க்கும் அதற்கு பின்னால் முத்துக்குமரன் போட்ட பிளான் தான் தற்போது அவருக்கு எதிரான ஒரு குரலை அதிகமாக எழுப்பியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பிரிக்கப்பட்டுள்ள நிலையில், பிசிகலாக பலத்தைக் கொண்டு மோதாமல் மற்ற எப்படி மோதினாலும் பெண்கள் அணியினர் மிக சவாலான எதிரணியாக தான் ஆண்களுக்கு விளங்கி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் காயின் கில்லர் என்ற பெயரில் நடந்த டாஸ்க்கின் போது, பெண்கள் அணியில் இருந்த அனைவரையும் மிக மிக பலமாகவும் அதே நேரத்தில் மூச்சு விடக் கூட முடியாமலும் ஆண்கள் அணியில் இருந்த சிலர் பிடித்து இறுக்கும்படி இந்த விதிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. என்னதான் திறமையுடன் இருந்தாலும் பலமாக ஆண்களுக்கு எதிராக மோதும் போது நிச்சயம் பெண்கள் அணியினர் கொஞ்சம் துவண்டு தான் போனார்கள். தர்ஷிகா, சௌந்தர்யா உள்ளிட்ட சிலர் கடைசிவரை போராடினாலும் சுனிதா, ஜாக்குலின், ஜெப்ரி ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி இருந்தனர்.

ஒரே ஒரு பெண்ணை மூன்று முதல் நான்கு ஆண்கள் வரை சேர்ந்து பலமாக கட்டுப்படுத்தியதன் காரணமாகவே பலருக்கு மூச்சு திணறல் வரை உருவானதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் இந்த போட்டி முடிந்த பின்னர் பேசும் பெண்ள் அனைவருமே மிக சோகத்துடன் இருந்ததுடன் மட்டும் இல்லாமல் இந்த டாஸ்க் எப்படி ஜெயிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நாமினேஷன் ஃப்ரீ ஃபாஸ் டாஸ்கின் முதல் சுற்றில் ஆண்கள் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இது பற்றி பேசும் சுனிதா, நம்மால் ஆண்களை எதிர்த்து இது போன்ற டாஸ்க்குகளில் எப்படி வெற்றி பெற முடியும் என்றும் இதற்கு ஆண்கள் அணியினரை குற்றம் சொல்லி விஷயம் இல்லை என்றும் கூறுகிறார்.

அது மட்டுமில்லாமல் இந்த சுற்றே தவறுதான் என்று தனது வாதத்தையும் சுனிதா முன்வைக்க இன்னொரு பக்கம் முத்துக்குமரன் மிக வேகமாக தன்னை அணைத்துக் கொண்டது மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அப்படி ஒரு சூழலில் தான் இந்த டாஸ்க் நடைபெறுவதற்கு முன்பாக ஆண்கள் அணியை வைத்து முத்துக்குமரன் போட்ட திட்டம் தொடர்பான விஷயமும் ரசிகர்களை அதிகம் கொந்தளிக்க வைத்துள்ளது.

3 முதல் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை டார்கெட் செய்து மடக்கி பிடித்து விடலாம் என்று அவர் போடும் திட்டம் மோசமாக இருந்ததாகவும் இப்படியா செய்ய வேண்டும் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்துள்ளது. மேலும் சுனிதா, தர்ஷிகா ஆகியோரை எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும் முத்துக்குமரன் திட்டம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.