மூக்குத்தி அம்மன் – 2 படத்துக்காக நயன்தாரா தன் குழந்தைகளுடன் இந்த விஷயத்தை ஒரு மாசமா பண்ணிட்டு இருகாங்க… ஐசரி கணேஷ் பகிர்வு…

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து…

nayanthara

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வல்லவன், பில்லா, வில்லு, யாரடி நீ மோகினி, இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நயன்தாரா.

2010 காலகட்டத்திற்கு பிறகு நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், நெற்றிக்கண்,கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தையும் பெற்றார் நயன்தாரா. தற்போது பலப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவிருக்கிறார். நயன்தாரா, சுந்தர் சி மற்றும் வேல்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்பொழுது நயன்தாரா பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நயன்தாரா தனது குழந்தைகளுடன் சேர்ந்தே விரதம் இருந்து வருகிறார். அவ்வளவு ஒரு Dedicated ஆன ஒரு ஆர்டிஸ்ட் நயன்தாரா என்று பகிர்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.