என் அண்ணன் பணத்தாசையால் காப்பிரைட் கேட்கிறாரா…? கங்கை அமரன் காட்டம்…

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என…

gangai amaran

இளையராஜா இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் இளையராஜா.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. சிறந்த இசை அமைப்பாளர்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்று இருக்கிறார். இவரது தம்பி கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

மேலும் இளையராஜா அவர்களின் மகன் கார்த்திக் ராஜா ஒரு இசையமைப்பாளர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பிரபல புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இவரது மறைந்த மகள் பவதாரிணி கூட சிறந்த பாடகி ஆவார். சமீபத்தில் இளையராஜா தான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் இளையராஜா அவர்கள் அவ்வப்போது அவரது பாடல்களுக்கான காப்பிரைட் விஷயங்களில் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குபவர். இதைப் பற்றி அவரது இளைய சகோதரர் கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் காட்டமாக பேசி இருக்கிறார்.

கங்கை அமரன் பேசியது என்னவென்றால், என் அண்ணன் இளையராஜா பணத்தாசையிலா காப்பிரைட் கேட்கிறார். எங்களுக்கு செலவு செய்ய முடியாத அளவிற்கு பணம் உள்ளது. அஜித் வச்சு அவ்ளோ செலவு பண்ணி எடுக்கிற படத்துக்கு என் அண்ணன் பாட்டு போட்டால் தான் உங்களுக்கு கைதட்டல் வருகிறது. அவரது உழைப்பினால் உருவான இசைக்கு அவர் காப்புரிமை கேட்பதில் என்ன தவறு என்று கோபமாக பேசி இருக்கிறார் கங்கை அமரன்.