ரொம்ப நாளைக்கு வில்லனாகவே என்னால் இருக்க முடியாது… SJ சூர்யா ஓபன் டாக்…

SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…

sj surya

SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் SJ சூர்யா.

பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் SJ சூர்யா. நடிகராக இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் SJ சூர்யா.

வில்லன் நடிகராக ஸ்பைடர், டான், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2 ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் SJ சூர்யா. தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிசியான ஒரு நடிகராக வலம் வருகிறார் SJ சூர்யா.

தற்போது விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட SJ சூர்யா அவர்களிடம் நிருபர் நீங்கள் இப்படி வில்லனாகவே தான் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த SJ சூர்யா, என்னால் நீண்ட காலம் வில்லனாகவே நடிக்க முடியாது. படம் இயக்கலாம் என்று ஐடியாவில் இருக்கிறேன். கில்லர் என்கிற படத்தை இயக்கி நானே நடிக்க போகிறேன். என்னுடைய இயக்கத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு அது நல்ல விருந்தாக இருக்கும் என்று பகிர்ந்து இருக்கிறார் SJ சூர்யா.