பிக் பாஸ் 8: இவ்ளோ வெளிப்படையா சொல்லிட்டாரே.. மூட்டி விடுறது தான் என் வேலை.. ரவீந்தர் பதிலால் பதறிய ரசிகர்கள்..

By Ajith V

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள், 24 மணி நேரத்திலேயே எலிமினேஷன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரபரப்பா பேசப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அதன் விறுவிறுப்பு குறைந்ததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில் முந்தைய சீசன்களை போல இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி மிகச்சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை ஆரம்பித்திருந்த நிலையில் போட்டியாளர்களும் கூட அப்படி ஒரு வேகத்தில் தான் நிறைய திட்டங்களுடன் இந்த வீட்டிற்குள் செயல்பட்டு வந்தனர். ஆனால், அதே நேரத்தில் திடீரென பல போட்டியாளர்களுக்கு கன்டென்ட் இல்லாமல் போக சிலர் மிக அமைதியாகவே பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக தெரிகிறது.

பிக் பாஸ் வீடு என வந்து விட்டால் தாங்கள் இருப்பதை ரசிகர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தால் தான் அவர்களை அதிகமாக கவனிப்பார்கள். ஆனால் விஷால், சத்யா உள்ளிட்ட ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இந்த சீசன் இருந்து வருகிறது. இதனால் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி வரும் எபிசோடில் தான் விறுவிறுப்பு இருக்கும் என ரசிகர்கள் பெரிதாக நம்பத் தொடங்கி விட்டனர்.

இதற்கு மத்தியில் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கள் வந்த நோக்கத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்றே சொல்லலாம். ஜாக்குலின் ஆரம்பத்திலிருந்து யாரிடமும் ஒட்டாமல் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் சௌந்தர்யாவிடம் மட்டும் நட்பாக இருந்து வருகிறார். மேலும் கடந்த ஏழு சீசன்களை ரிவ்யூ செய்த பேட்மேன் ரவீந்தரும் மிக நேர்த்தியாக தனது கேமை பிக் பாஸ் வீட்டில் ஆடி வருகிறார்.

இவர்களைப் போலவே தீபக், சுனிதா, பவித்ரா, முத்துக்குமரன் என சில போட்டியார்கள், ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சுனிதாவிடம் தனது கேம் பிளான் என்ன என்பதை பற்றி பேட்மேன் ரவீந்தர் தெரிவித்து கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது.

நீங்க வேணா நல்லா பாருங்க. நான் போய் யார் கூடயும் சண்டை போடல. சும்மா கலகத்தை தான் மூட்டி விடுறேன். அந்த கலகம் பேச்சு பொருளா மாறும் போது எல்லாரும் உள்ள வராங்க. சவுந்தர்யா தனியா பேசி பிரச்சனைர்துக்கும் நான் தான் காரணம். 15 பேர் ஒரே விஷயத்துல இருக்குறப்போ ஒருத்தர் மட்டும் மாற்றுக் கருத்து சொன்னா உனக்கான வாய்ப்பு அப்படியே கிடைத்து விடும் என நான் கூறினேன்என சுனிதாவிடம் Fatman ரவீந்தர் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் நட்பாக இருந்து வருவது பற்றியும் பல விஷயங்களை அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே போல பலரது மத்தியில் ஏதாவது கருத்துக்களை கூறி அவர்களை சற்று ட்ரிகர் செய்து பிரச்சனை ஆரம்பிப்பதற்கான காரணமாக இருப்பதாக பேட்மேன் ரவீந்தர் தன்னை ஒப்புக்கொண்டிருப்பது பற்றி ரசிகர்கள் பலவிதமான கருத்துகளையும் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர்.