உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ்சும் இணைந்து தயாரிக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகை சாய்பல்லவி குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அமரன் படம் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சாய்பல்லவியின் சவாலான நடிப்பைப் பற்றி தெரிவித்துள்ளார். அவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான சில முக்கியமான காட்சிகளை வலியுறுத்தினார்.
இருவரும் ஆடும் ஆக்டேன் நடனக்காட்சிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முன்னேற்றம் குறித்து கமல் திருப்தியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாய்பல்லவியின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார் ராஜ்குமார் பெரியசாமி.
சாய்பல்லவி மிகவும் கடினமான காட்சிகளைக்கூட எளிதில் நடித்து சமாளித்து விடுவார். ஒவ்வொரு காட்சியையும் கதையின் சூழலைப் புரிந்து கொண்டு கவனமாக நடித்து விடுவார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சாய்பல்லவியின் அர்ப்பணிப்பால் ஒரே நாளில் 6 காட்சிகள் வரை படமாக்க முடிகிறது. இது அவரது தொழில்முறையை பிரதிபலிக்கிறது.

சாய்பல்லவியின் நடிப்பு, திறமை மற்றும் தொழில்முறை அணுகுமுறைக்காக அவரை நான் நன்கு அறிவேன். அவரது படங்களின் தேர்வு மற்ற நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணம். அவரிடம் வெறும் கதைகளத்தை மட்டும் தான் நான் தெரிவித்தேன். இவ்வாறு அவர் பேசினார்.
அமரன் ஒரு ஆக்ஷன் படம். படத்தில் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஹனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மிர் சல்மான், கௌரவ் வெங்கடேஷ், ஸ்ரீகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதே போல சிம்புவும் கமல் தயாரிப்பில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.

