Bigg Boss Tamil Season 8 Day 15: இரண்டாவது முறையாக கேப்டன் ஆன தர்ஷிகா… நாமினேஷனில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்!

By Meena

Published:

Bigg Boss Tamil Season 8 Day 15 வார இறுதியில் முதல் நாள் பயத்தோடையும் பதட்டத்தோடையுமே தொடங்கியது. சௌந்தர்யா கேர்ள்ஸ் டீம் இடம் எதுவுமே கேட்காமல் பாய்ஸ் டீமில் இருக்கும் உணவுகளை எடுத்து உண்பதை பற்றி பெண்கள் அணியினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் அணிக்காக சௌந்தர்யா எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

bigg boss

அடுத்ததாக ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு யார் செல்வது பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு யார் செல்வது என்ற கலந்துரையாடல் நடக்கிறது. அடுத்ததாக capitancy டாஸ்க் நடக்கிறது. இந்த முறையும் அபாரமாக விளையாடி தர்ஷிகா இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக ஆனார்.

அவரின் விளையாட்டை ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸும் கூட பாராட்டினார்கள். அடுத்ததாக பெண்கள் அணியிலிருந்து ஆண்கள் அணிக்கு சாச்சனாவும், அங்கிருந்து இங்கே ஜெபிரியும் அனுப்புவதற்காக முடிவெடுக்கப்பட்டு இருவரும் இடம் மாறினார். அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடந்தது.

இந்த வாரம் நாமினேஷனில் பிக் பாஸ் வைத்த டெஸ்ட் என்னவென்றால் அனைவரும் கலந்து நாமினேஷன் செய்யலாம் என்பதுதான். கடந்த வாரம் பெண்கள் அணி முழுவதும் ஆண்களை நாமினேட் செய்யவும் ஆண்கள் அணி முழுவதும் பெண்களை நாமினேட் செய்யவும் சொல்லி இருந்தார்.

இந்த வாரம் அனைவரும் கலந்து நாமினேட் செய்தனர். இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் தர்ஷா, அருண், ஜாக்குலின், சத்யா, அன்சிதா, பவித்ரா, சௌந்தர்யா, முத்துக்குமரன் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.

bigg boss

இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் டேஞ்சரஸ் சோனில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் சத்யா, சௌந்தர்யா, அன்சிதா ஆகிய மூவர். அடுத்ததாக க்ராசரி ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. அதற்கும் ஒரு டாஸ்க் வைத்து ஷாப்பிங் அனுப்பினார் பிக் பாஸ்.

இந்த முறை அனைவரும் கரெக்டாக ஷாப்பிங் செய்ததால் அவர்கள் எடுத்த பொருள் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. போன வாரம் போல் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டு இருக்காமல் விளையாட்டை விளையாட்டாக பார்த்து ஃபன்னாக இந்த வாரம் கொண்டு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போகப்போக தான் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.