பிக் பாஸ் 8: “என்ன பத்தி நீ பேசாத”.. “நீ சரிப்பட்டு வரமாட்டே”.. ஜாக்குலினால் பெண்கள் அணியில் வெடித்த சண்டை..

By Ajith V

Published:

Bigg Boss Jacquline Vs Pavithra : தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு சில தினங்களாகும் நிலையில் இதுவரைக்கும் பெரிய அளவில் சண்டைகள் எதுவும் நடக்காமல் இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் தற்போது பெண்கள் அணியில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு தமிழில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் ஆண்கள் அணியில் ஒன்பது பேரும் பெண்கள் அணியில் 8 பேரும் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகை சாச்சனா முதல் நாள் முடிவதற்குள்ளாகவே எலிமினேட் ஆகியிருந்தது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

24 மணி நேரத்தில் ஒருவரை எப்படி தெரிந்து கொண்டு நாமினேட் செய்ய முடியும் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர். இது பற்றி பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கூட அதிகமாக விவாதிக்க தொடங்கியிருந்த நிலையில் தற்போது அடுத்த டாஸ்க்கை நோக்கி அவர்கள் நகர தொடங்கி விட்டனர்.

பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு அணிகளும் தனித்தனியான இடத்தில் இருக்க தற்போது அது தொடர்பாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணியுடனும், ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணியுடனும் இணைந்து விளையாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இரு அணிகளில் இருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில் பெண்கள் அணியில் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட சமயத்தில் தான் கடும் சண்டை உருவாகிது. இதில் ஜாக்குலின் தான் ஆண்கள் வீட்டிற்கு செல்வதாகவும் கூற இன்னொரு பக்கம் பவித்ராவும் செல்கிறேன் எனக்கூறிதா தெரிகிறது.

ஆனால் பவித்ரா செல்வது ஜாக்குலினுக்கு பிடிக்காமல், “நீ போனால் அங்கே பாவம் பார்ப்பாய். அதனால் நீ போக வேண்டாம். நீ பாவமா இருந்தாலும் இல்லனாலும் நீ போக வேண்டாம்” என விரக்தியில் கூறினார். இதைக் கேட்டதும் ஆவேசம் அடைந்த பவித்ரா, “என்ன பத்தி நீங்க எதுவும் பேச வேணாம். தர்ஷிகாவோ அட்வைஸ் பத்தி பேசுனா அவகிட்ட மட்டும் பேசு. என்ன பத்தி நீங்க பேசக்கூடாது. நீ கத்துறத நான் ஏன் கேக்கணும்” என ஜாக்குலினிடம் கூறினார்.

தொடர்ந்து அனைத்து பெண்களிடமும் பேசிய பவித்ரா, “நீங்க யாரு வேணா அந்த டீமுக்கு போங்க. என்ன பாவம் பாப்பாங்க. என்ன ஜட்ஜ் பண்ணுவாங்க அப்படின்னு தோணிச்சுன்னா என்னை அனுப்பாதீங்க.. நான் விளையாடுவேன்னு தோணுனா மட்டும் என்னை அனுப்புங்க” என கூறிவிட்டு வேகமாக எழுந்து சென்று விட்டார். இதனால் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு யார் செல்ல வேண்டும் என்பதே பெரிய விவாதம் உருவாகியுள்ளதால் பிக் பாஸில் இது பெரிய சண்டையை உருவாக்கும் என்றே தெரிகிறது.