பிரதீப் வாழ்க்கையில் இது நடக்க வேண்டும்… நண்பனாக நான் அதை பார்க்க வேண்டும்… உருக்கமாக பேசிய அஸ்வத் மாரிமுத்து…

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம்…

aswath

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.

ஓ மை கடவுளை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.

பின்னர் அவரது நண்பர் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடியது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பலரும் கருத்துக்களை கூறினார்கள்..

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வத் மாரிமுத்து தனது நண்பர் பிரதீப் ரங்கநாதனை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் லவ் டுடே திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. டிராகன் திரைப்படத்தின் மூலமாக அவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதேபோல அவர் வாழ்க்கையில் மேலும் முன்னேற வேண்டும் அவருக்கு நிறைய ரசிகர்கள் வரவேண்டும் ஒரு நாள் நேரு ஸ்டேடியம் முழுவதும் அவருக்காக ரசிகர்கள் வரவேண்டும் அதை நண்பராக நான் பார்த்து ரசிக்க வேண்டும் என்று பகிர்ந்து இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.