அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அசோக் செல்வன்.
தொடர்ந்து தெகிடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் அசோக்செல்வன். தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருவன் முப்பரிமாணம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.
2018 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் அசோக் செல்வன். தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் கமல்ஹாசனின் Thug Life திரைப்படத்தில் அசோக்செல்வன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசோக் செல்வன் இப்பட வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
அசோக் செல்வன் கூறியது என்னவென்றால், Thug Life பட வாய்ப்பு கிடைத்தது எனக்கு கனவு போலவே இருக்கிறது. நான் antha ஒரு ஃபேன் பாய் மொமென்ட்காக காத்துக் கொண்டிருந்தேன். கமல் சாருடன் எப்படி நடிக்க போகிறேனோ என்ற பதட்டத்தில் சிம்பு சாரிடம் கேட்டேன் அவரும் கமல் சாருடன் நடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் அவரின் கண்ணை பார்க்காமல் நடித்து விடுங்கள் என்று கூறினார் என்று பகிர்ந்து இருக்கிறார் அசோக் செல்வன்.