பிக் பாஸ் 8: ரஞ்சித் அண்ணாவ எங்க அடிச்சே.. அருணின் கேள்வியால் கண்ணீர் விட்டு அழுத தர்ஷா..

By Ajith V

Published:

Arun Prasath, Ranjith and Dharsha Gupta : பிக் பாஸ் வீட்டில் தற்போது முடிந்த புதிய ஒரு டாஸ்க்கால் மீண்டும் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிக்குள் மிகப்பெரிய ஒரு சண்டையும், சர்ச்சைகளும் உருவாகியுள்ளது. எட்டாவது சீசனின் மூன்றாவது வாரம் மிக அமோகமாக ஆரம்பமாகி இருந்த நிலையில், ஆண்கள் அணியிலிருந்து ஜெஃப்ரியும் பெண்கள் அணியில் இருந்து சாச்சனாகவும் மாறி மாறி ஆடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் புதிதாக பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பெண்கள் அணியில் இருக்கும் அனைவரும் ஹோட்டல் ஸ்டார் ஹோட்டல் நடத்தும் ரோல்களிலும் இன்னொரு பக்கம் அங்கே தங்குவதற்காக வருபவர்களாக ஆண்கள் அணியில் இருந்தும் வருகின்றனர். அப்போது காமெடி என்ற பெயரில் ஆண்கள் அணியினர் சிலர் வித்தியாசமாக எடுத்த முயற்சிகளை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிக் பாஸையும் எரிச்சல் அடைய வைத்திருந்தது.

இதனால் ஆண்கள் அணியினர் அனைவரையும் கன்பர்சன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், சிரிக்க வைப்பதற்கு மட்டுமே பார்க்காமல் நவரசமும் கலந்து செய்வதுதான் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் அந்த வழியை பின்பற்ற வேண்டும் என்றும் ஆண்கள் அணிக்கு அறிவுறுத்துகிறார். இதனைத் தொடர்ந்து சில திட்டங்களுடன் ஆண்கள் அணியினரும் விளையாடி இருந்தனர். அதே போல ஆண்கள் அணியினரும் ஸ்டார் ஹோட்டல் நடத்துபவர்களாக மாறி ஆடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் புதிதாக அறிவிக்கப்பட்ட டாஸ்க் முடிவுகள் ஆண்கள் அணிக்கு சாதகமாக இருந்தாலும் அதில் அவர்கள் மேற்கொண்ட விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. காயின் கில்லர் என்ற பெயரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு டாஸ்க் நடக்க, இதில் பெண்கள் அணியில் இருக்கும் அனைவரையும் மிகக் கடுமையாக ஆண்கள் அணியில் பிடித்து மடக்குவது போன்று விதிகள் இருப்பதால் பலரும் இதனை எதிர்த்து தான் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருந்தாலும் இது போன்ற டாஸ்க்குகளில் ஆண்களை எதிர்த்து பலம் காட்டுவது கடினம் என்ற சூழலில் பல பெண்களும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறி இருந்தனர். இதற்கு மத்தியில் தர்ஷா தெரியாமல் ரஞ்சித் ரஞ்சித்தை படக்கூடாத இடத்தில் மிதித்து விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அருண் பிரசாத் கோப்பட்டதுடன் மட்டுமில்லாமல் தர்ஷா குப்தாவிடம் ஏன் அங்கே மிதித்தாய் எனக் கூறிய கூறி வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தன்னையும் விளையாட்டுக்கு நடுவே தர்ஷா அடித்ததாகவும் கூறும் அருண் பிரசாத், இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்பது போல தர்ஷாவை கடிந்து கொள்கிறார். ஆனால் இது போன்ற மோதல்கள் போட்டிகள் ஆடும் போது நிச்சயம் எதிர்பாராத நேரத்தில் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. ஆனால் அருண் பெரிய ஒரு விஷயமாக எடுத்து சண்டை போட தர்ஷா குப்தாவும் ரொம்ப நேரம் அழுது கொண்டிருந்துள்ளார்.

கேம் என வரும்போது வேண்டுமென்று யாராவது அடிப்பார்களா என்றும் அதற்காக அழுது கொண்டே கேட்க அனைத்து பெண்களும் தர்ஷாவுக்கு ஆதரவாக இருக்க இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.