தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் சற்றும் விறுவிறுப்பு குறையாமல், நாளுக்கு நாள் அசுர வேகத்தில் புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது, மாநில அரசியலில் ஒரு மாபெரும் அதிகார மாற்றத்திற்கான புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரங்களின் தற்போதைய கணிப்புப்படி, வரும் நாட்களில் அதிமுகவிலிருந்து மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் வரை தங்களது பதவிகளைத் துறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காலியாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்குத் தொகுதியையும் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் 11 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் களம் அமையப்போவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்கும் நோக்கில் அதிரடியான பொருளாதார வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசுத் தலைமைச் செயலக அதிகாரிகளுடன் அவர் நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மிக முக்கியமான வரலாற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1967ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் வாங்கப்பட்ட ஒட்டுமொத்தப் பொதுக்கடன் குறித்த முழுமையான 60 ஆண்டுகால தரவுகளை உடனடியாக திரட்டுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலகத்தின் நிதித்துறை மற்றும் திட்டமிடல் துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ரகசிய உத்தரவின்படி, முந்தைய அரசுகளின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்கள் தனியாகப் பிரிக்கப்பட உள்ளன.
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக்காலம் தொடங்கி, அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான கடந்த ஆட்சிகள் வரை தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது எப்படி என்பது குறித்து விரிவான தணிக்கை செய்யப்பட உள்ளது. எந்தெந்த முதலமைச்சரின் காலத்தில், எந்தெந்த நிதியாண்டுகளில் எவ்வளவு கடன் வாங்கப்பட்டது என்ற முழுப் பட்டியலும் தயாராகி வருகிறது.
இந்த அதிரடி ஆய்வின் மிக முக்கியமான நோக்கம், இத்தனை ஆண்டுகளாக வாங்கப்பட்ட இமாலய கடன்கள் அனைத்தும் எந்தெந்த குறிப்பிட்ட உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்டன என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதுதான். கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பிரம்மாண்ட பாலங்கள், சாலைத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள் மற்றும் மின்சார வாரியச் சீரமைப்புகளுக்காகப் பெறப்பட்ட கடன் நிதிகள், அந்தந்த திட்டங்களுக்கு உண்மையில் முழுமையாகச் செலவு செய்யப்பட்டதா? அல்லது திட்டங்கள் வெறும் காகித அளவோடு நிறுத்தப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு வழிகளில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதியின் உண்மைத் தன்மை மற்றும் கள நிலவரத்தை ஆராய்வதற்காக, தலைமைச் செயலக அதிகாரிகள் அடங்கிய ஒரு தனிக் குழு மிக ரகசியமாகத் தரவுகளைத் திரட்டி, நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கும் மேலான ஒரு விரிவான நிதி நிலைமை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ ஒன்றைச் சில நாட்களில் பொதுவெளியில் சமர்ப்பிக்கத் தயாராகி வருகின்றனர். இத்திட்டமிட்ட அதிரடி ஆக்ஷனால், கடந்த காலங்களில் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதற்குத் துணை நின்ற அதிகாரிகள் பலரும் சட்டத்தின் முன் மாட்டித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழக அரசியலையே உலுக்கக்கூடிய ஒரு “பெரிய சம்பவம்” அரங்கேறப் போவது மட்டும் உறுதி எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
தவெக அரசின் இந்த அசுர வேகப் பொருளாதாரத் தணிக்கை மற்றும் வெள்ளை அறிக்கை குறித்த ரகசியத் தகவல்கள் கசிந்ததன் காரணமாகவே, தற்போதைய முக்கிய எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் தங்களது அரசியல் எதிர்காலப் பயத்தில் முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றன. தங்களது கடந்த கால நிதி முறேகடுகளும், வெற்று விளம்பர திட்டங்களும் மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், இரு கட்சிகளும் தங்களது ஊடகப் பலத்தைப் பயன்படுத்தி புதிய தவெக அரசுக்குக் குடைச்சல் கொடுக்க ஒன்றிணைந்து முயன்று வருகின்றன.
முடிவாக, தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமைக்குக் காரணமான உண்மைச் சூத்திரதாரிகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறார். வெற்று அரசியல் அடுக்குமொழிப் பேச்சுகளைத் தாண்டி, 60 ஆண்டுகால நிதி ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் இந்தத் தூய சக்தியின் ராஜதந்திர நகர்வுகளுக்கு முன்னால், பாரம்பரியத் திராவிடக் கட்சிகளின் எந்தவொரு அவதூறுப் பிரசாரங்களும், அரசியல் சதிகளும் இனிமேல் ஒருபோதும் எடுபடப் போவதில்லை. மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதும், தமிழக கஜானா மீண்டும் தூய்மையாக்கப்படுவதும் இந்த ஆட்சியில் மிக விரைவில் சாத்தியமாவது மட்டும் திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
