யாரிடம் இருந்து விலக வேண்டும்? வாழ்க்கையில் முன்னேற நீங்கள் பின்பற்ற வேண்டியது இதுதான்..!

  நாமும் மற்றவங்க மாதிரி கோவில் குளத்துக்கு எல்லாம் போறோம். தினமும் வேலை செய்றோம். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே. இன்னும் நாம அப்படியே தானே இருக்கோம்னு…

 

நாமும் மற்றவங்க மாதிரி கோவில் குளத்துக்கு எல்லாம் போறோம். தினமும் வேலை செய்றோம். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. ஆனாலும் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே. இன்னும் நாம அப்படியே தானே இருக்கோம்னு சிலர்; அங்கலாய்ப்பது உண்டு. அவர்கள் தன்னை அறியாமலேயே சில தவறுகளைச் செய்து வருகிறார்கள். வாங்க அதைச் சரி செய்வது எப்படின்னு பார்ப்போம்.

மற்றவர்கள் உங்களைப் போலவே சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணரும் முதல் கணமே அங்கிருந்து விலகிச் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையைச் சரிசெய்வதற்கு முன், உங்கள் தூக்கத்தைச் சரிசெய்யுங்கள். குழப்பத்தை விரும்பும் நபர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

நீங்கள் வேகமாக எதிர்வினையாற்றுவதை நிறுத்தியவுடன் பெரும்பாலான பிரச்சனைகள் சுருங்கிவிடும். அதிகமாக விளக்குவதன் மூலம் உங்கள் மன அமைதியை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் நோக்கங்களை விட உங்கள் பழக்கவழக்கங்களே உங்கள் நேர்மையை பறை சாற்றும். அது உங்களைச் சோர்வடையச் செய்தால், அதுவே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

நீங்கள் எதை அனுமதிக்கிறீர்களோ, அதைப் பொறுத்தே மக்கள் உங்களை நடத்துவார்கள். உங்கள் எதிர்காலம் நீங்கள் தினமும் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எல்லோரும் உங்களை அணுகும் தகுதியைப் பெற்றிருப்பதில்லை.

மோதலை விட மௌனமே உண்மையை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. உங்கள் முன்னுரிமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வேறு யாராவது அதைத் தேர்ந்தெடுப்பார்கள். சுகம் என்பது வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரி.

ஊக்கத்தை விட உங்கள் சூழலே உங்களை அதிகம் வடிவமைக்கிறது. மாற்றம் என்பது நீங்கள் தொடங்கும் வரை மட்டுமே கடினமானது.