ஆப்கானிஸ்தான் குறித்த தனது கொள்கையில் பாகிஸ்தான் ஒரு வியத்தகு மாற்றத்தை அறிவித்துள்ளது. சமரசத்திற்கு வரவும், பாகிஸ்தானின் பாதுகாப்பு கோரிக்கைகளை ஏற்கவும், இல்லையேல் காபூலில் தலிபான் ஆட்சிக்கு சவால் விடக்கூடிய மாற்று அரசியல் சக்திகளுக்கு இஸ்லாமாபாத்தின் ஆதரவை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே ஆப்கான் தலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை என்று உயர்மட்ட இராஜதந்திர மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலிபான் அரசுடன் மாதக்கணக்கில் நீடித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் இந்த இறுதி எச்சரிக்கையை துருக்கி மத்தியஸ்தர்கள் மூலம் அனுப்பியுள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை கட்டுப்படுத்த தலிபானின் தயக்கமின்மை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது ஆகியவை இஸ்லாமாபாத்தின் சோர்வுக்கு முக்கியக் காரணம்.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தது, தலிபான் இந்தியாவுடன் கைகோர்க்க முயல்வதை காட்டுகிறது. இந்த நகர்வு காரணமாக, காபூலுடனான தனது நீண்டகால உறவு பாகிஸ்தான் மறுமதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தலிபானின் நிலைப்பாட்டை இப்போது பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் அவமதிப்பாகவும் பார்க்கிறது. இதன் விளைவாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தலிபான் எதிர்ப்பு அரசியல் பிரமுகர்கள் மற்றும் எதிர்ப்பு வலைப்பின்னல்களுடன் தன்னை மீண்டும் சீரமைக்க தொடங்கியுள்ளது.
முதலில் கத்தார் மற்றும் பின்னர் துருக்கி மத்தியஸ்தம் செய்த மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், பாகிஸ்தானும் ஆப்கான் தலிபானும் ஒருமித்த கருத்தை எட்ட தவறிவிட்டன. இஸ்தான்புல் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பாகிஸ்தான்-ஆப்கான் போர் நிறுத்தம் இப்போது செயலற்ற நிலையில் உள்ளது.
பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் கோரிக்கைகள் பின்வருமாறு:
TTP மீது உறுதியான நடவடிக்கை
TTP போராளிகளை ஒப்படைத்தல்
டூரண்ட் கோடு எல்லையில் பதற்றத்தை அதிகரிக்க மாட்டோம் என்ற உத்தரவாதம்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த ஒரு இடைநிலை மண்டலத்தை உருவாக்குதல்
வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை இயல்பாக்குதல்
இருப்பினும், தலிபான் அரசாங்கம் இந்த கோரிக்கைகளை, குறிப்பாக TTP-யை ப்படைத்தல் என்ற கோரிக்கையை எதிர்த்தது. இது பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளை இலக்காக கொண்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொள்ளும்போது, ஏற்க முடியாத நிலைப்பாடாக பாகிஸ்தான் கருதுகிறது.
ஆனால் பாகிஸ்தானின் இந்த எச்சரிக்கையை ஆப்கானிஸ்தான் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. யாருக்கு யார் எச்சரிக்கை விடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது என ஆப்கானிஸ்தான் கமெண்ட் அடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
