டிரம்பினால் நிப்பாட்ட முடியாத ஒரே போர் இதுவாகத்தான் இருக்கும்.. போர் ஒத்திகைக்கு தயாராகும் இந்தியா? இந்த முறை பாகிஸ்தான் கதம் கதம்.. முப்படைகளும் ஒரே நேரத்தில் தாக்குதலா? கழுகு போல் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்.. அச்சத்தில் பாகிஸ்தான்..!

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுப் பயிற்சியானது, சமீப காலமாக பாகிஸ்தானை நோக்கிய ஒரு தெளிவான ‘பல்முனைப் போர் (Multi-domain Warfare)’ ஒத்திகைக்கான செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல்…

india1

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுப் பயிற்சியானது, சமீப காலமாக பாகிஸ்தானை நோக்கிய ஒரு தெளிவான ‘பல்முனைப் போர் (Multi-domain Warfare)’ ஒத்திகைக்கான செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குஜராத் முதல் வடக்கு எல்லைகள் வரையிலான பகுதிகளில் நடந்த தீவிரப் பயிற்சிகள், இந்தியாவின் போர் தயார்நிலை மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளைப் பறைசாற்றுகின்றன.

சமீபத்திய பயிற்சிகளில் ராணுவம், விமான தாக்குதலில் இருந்து முக்கிய தளங்களை பாதுகாக்க உதவும் ‘ராபிட் வால் பேனல்ஸ்’ (Rapid Wall Panels) போன்ற விரைவான உள்கட்டமைப்பு நுட்பங்களை முதன்முதலாக சோதித்துள்ளது.

இந்த பயிற்சிகள் மூலம், போர்ச்சூழலில் மிக குறுகிய காலத்திற்குள் விமானத் தளங்கள், ஏவுகணைத் தளங்கள் அல்லது முக்கியமான பகுதிகளை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் தளவாடத் திறனை இந்தியா உறுதி செய்துள்ளது.

வடக்குப் பிராந்தியத்தில், இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை (Northern Command) தலைமையில் முப்படைகளின் கூட்டுப் போர் ஒத்திகை மிக தீவிரமாக நடைபெற்றது.

இந்தியா, பல டொமைன்களில் போரிடும் திறனை சோதித்தது. இதில், ட்ரோன்கள் (UAVs), ஆளில்லா வான்வழி வாகனங்கள், துல்லிய தாக்குதல் ஆயுதங்கள் (Precision Munitions) மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ட்ரோன்-அடிப்படையிலான ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.

வானிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள் , நிலத்தில் உள்ள இலக்குகள் , கடலுக்கு அடியில் உள்ள இலக்குகள் ஆகிய முப்பரிமாண அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் கையாள்வது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

S-400 ஏவுகணை அமைப்புகள் போன்ற முக்கியமான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மூலம் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் ஒத்திகையும் நடத்தப்பட்டது. இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், போர் களத்தில் ஆயுத செயல்பாடுகளின் செயல்திறனை (Validation of Weapons Effectiveness) உறுதி செய்வதாகும். முப்படைகளின் இந்த ஒத்திகை, அதிநவீன நெட்வொர்க் மையப்படுத்தப்பட்ட போர்முறையை அடிப்படையாக கொண்டது.

அனைத்து இராணுவ தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பொதுவான கணினி வலையமைப்பின் கீழ் இணைக்கப்பட்டு, அதிகபட்ச வேகம் மற்றும் துல்லியத்துடன் முடிவெடுக்க பயிற்சி செய்தனர். இதன் மூலம், இலக்குகளை கண்டறிவது முதல் தாக்குதல் நடத்துவது வரையிலான செயல்முறையின் வெற்றி விகிதத்தின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிகளின் மூலம், இந்திய ராணுவம் பாகிஸ்தானை நோக்கிய முழு அளவிலான போர்ச்சூழலுக்குத் தயாராகிறது என்பது தெளிவாகிறது. பாகிஸ்தான் நேரடியாக போரில் ஈடுபட்டால், முழு அளவில் பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா தயார்படுத்துகிறது. இதில், விமான தாக்குதல்கள் முதல் ஆளில்லா வாகனங்கள் மூலம் இலக்குகளை துல்லியமாக அழிப்பது வரை அனைத்தும் அடங்கும்.

இந்த பயிற்சியில், சைபர் பாதுகாப்புப் படைகள், விண்வெளிக் கருவிகள், லேசர் பீம் அடிப்படையிலான ஆயுதங்கள் மற்றும் மைக்ரோவேவ் ஆயுதங்கள் போன்ற புதிய தலைமுறை போர் ஆயுதங்களின் செயல்பாடுகளின் உண்மைத்தன்மையும் சோதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் அணு ஆயுத பயன்பாடு குறித்த வியூக சூழலை சமாளிப்பதற்கான போர் ஒத்திகைகளும் நடத்தப்பட்டிருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, இந்தக் கூட்டு பயிற்சிகள் இந்தியாவின் போர் ஆயத்த நிலை, புதிய தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, மற்றும் எதிர்காலப் போர்ச் சூழல்களை சமாளிக்கும் திறன் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளன.