மசூத் அசாரின் குடும்பத்தினர் நிரபராதிகள், அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? பயங்கரவாத பயிற்சி முகாமில் குடும்பத்தினர்களுக்கு என்ன வேலை? தீவிரவாதிகளின் கேள்விக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா..

இந்திய பாதுகாப்புப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பே முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.…

mazood

இந்திய பாதுகாப்புப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பே முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இத்தாக்குதல்கள் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்பட்டன. இந்த ஒப்புதல் மூலம், பாகிஸ்தான் இராணுவத்திற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பும் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் இந்த விவகாரம் குறித்து பேசினர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் அரசு மறுத்து வந்த தகவலை உறுதி செய்தார். “மிசைல்கள் வந்து தாக்குதல் நடத்தியதில், மசூத் அசாரின் மொத்த குடும்பமும் அழிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார். இதிலிருந்து, மசூத் அசாரின் குடும்பம் அந்த பயங்கரவாத முகாமில் இருந்ததும், இந்தியா நடத்திய தாக்குதல்கள் துல்லியமானவை என்பதும் உறுதியாகிறது.

இலியாஸ் காஷ்மீரியின் இந்தக் கருத்து, பாகிஸ்தான் அரசின் நிலைப்பாட்டை முரண்படுத்துகிறது. ஏனென்றால், இதற்குமுன் பாகிஸ்தான் அரசு, தாக்குதலில் எந்த பயங்கரவாத முகாமும் பாதிக்கப்படவில்லை என்று கூறி வந்தது. இந்த ஒப்புதல், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பதையும், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தெளிவாக காட்டுகிறது.

இந்த விவாதத்தில், இந்திய ராணுவ அதிகாரி ஜி.டி. பக்‌ஷி, இந்தியா நடத்திய தாக்குதல்களின் முக்கியத்துவத்தை பற்றிப் பேசினார். “2016-ல் நாங்கள் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கையும், 2019-ல் நடத்திய பாலகோட் தாக்குதலையும் பாகிஸ்தான் மறுத்தது. ஆனால், இந்த முறை பாகிஸ்தானின் ஊடகங்கள் மற்றும் மக்கள் காணும் வகையில், மிக முக்கியமான பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் தளபதிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த பாகிஸ்தானிய இராணுவத்தின் ஆதரவோடு செயல்படுகிறார்கள்” என்றார்.

இருப்பினும், இந்த விவாதத்தில் கலந்துகொண்ட சில பாகிஸ்தானிய பத்திரிகையாளர்கள், “மசூத் அசாரின் குடும்பத்தினர் நிரபராதிகள், அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இந்திய தரப்பினர், “பயங்கரவாதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை மனித கேடயமாகப் பயன்படுத்தி கொள்கிறார்கள். பயங்கரவாத பயிற்சி முகாமில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அமெரிக்கா அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற போது, அவரது குடும்பத்தினர் அருகில் இருந்தார்களே, அப்போது பாகிஸ்தான் அதை ஏன் கேள்வி கேட்கவில்லை?” என்று பதில் கேள்வி கேட்டனர்.

இந்த சூழ்நிலையைக் குறித்து விவாதித்த மற்றொரு சிறப்பு விருந்தினர் தீபக் போஹ்ரா, இலியாஸ் காஷ்மீரியின் ஒப்புதலுக்கு மூன்று முக்கிய காரணங்களை சொன்னார். பாகிஸ்தான் ராணுவத்துடனான அவரது உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். நிதி உதவி கிடைக்காததால், இராணுவத்தின் மீது அவருக்கு அதிருப்தி இருக்கலாம். பாகிஸ்தானிய இராணுவ தலைவர் தனது அதிகாரத்தை இழந்து வருகிறார். இல்லாவிட்டால், இலியாஸ் காஷ்மீரி போன்றவர்கள் பகிரங்கமாக பேசத் துணிய மாட்டார்கள்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களை ‘நிரபராதி’ என்று கூறும் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ பொய்யை, இலியாஸ் காஷ்மீரி அம்பலப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில், இந்த விவாதம், பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.