நாக தோஷம் நிரந்தரமாக விலக… போகர் சொல்லும் எளிய பரிகாரம்…!

நாகதோஷத்துக்கு பல பரிகாரங்கள் செய்வர். பாலும், மஞ்சளும் நாகர் சிலை மீது ஊற்றுவார்கள். இதைத் தான் நாம் பார்த்திருப்போம். அதே நேரம் அரச மரத்தடியில் நிறைய நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதையும்…

நாகதோஷத்துக்கு பல பரிகாரங்கள் செய்வர். பாலும், மஞ்சளும் நாகர் சிலை மீது ஊற்றுவார்கள். இதைத் தான் நாம் பார்த்திருப்போம். அதே நேரம் அரச மரத்தடியில் நிறைய நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதையும் பார்த்திருப்போம். இனி நாகதோஷம் நிரந்தரமாக விலக என்ன செய்ய வேண்டும். போகர் சித்தர் கூறும் அந்த எளிய பரிகாரம் என்னன்னு பார்ப்போம்.

ஆடி‌மாத வளர்பிறை சதுர்த்தி நாள்தான் ”நாக சதுர்த்தி” என்று அழைக்கப்படுகிறது. நாக சதுர்த்தி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்.

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது “போகர்12000” நூலில் கூறி இருக்கிறார். இந்த பரி பரிகாரம் காரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் “நாக சதுர்த்தி திதி”

“நாக சதுர்த்தி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார். நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள்,  நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்