உலகின் முன்னணி AI டெக்னாலஜியான OpenAI நிறுவனம் தற்போது மேம்பட்ட AI மொழி மாதிரியாக GPT-4.5 என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ChatGPT Pro பயனர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
DeepSeek-R1 போன்ற போட்டி மாடல்கள் உருவாகி வரும் சூழலில், OpenAI தனது ChatGPTஐ புதுமையுடன் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து
OpenAI தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் கூறியபோது, GPT-4.5 புதிய மாடல் வெளியீடு ஒரு சிந்தனைமிக்க மனிதர்பேசுவது போன்ற அனுபவத்தை வழங்கும் என கூறினார்.
மேலும் GPT-4.5 முற்றிலும் புதிய வகையான ஒரு புத்திசாலித்தனமான மாடல் என்றும் இதில் ஒரு தனித்துவமான மந்திரம் உள்ளது, என்றும், இதுதரும் ரிசல்ட்டை நான் இதற்கு முன்பு உணரவில்லை,” என்றும் அவர் கூறினார்.
OpenAI வெளியிட்டுள்ள தகவலின்படி, GPT-4.5 ஒரு இயல்பான மற்றும் எளிதான பயனர் அனுபவத்தை வழங்குவதாகவும், ஒரு விரிவான இண்டலிஜென்ஸ் டேட்டாவை கொண்டுள்ளது என்றும் தெரிகிறது.
அதிக எமோஷனல் அறிவாற்றல் கொண்டு சிறப்பாக செயல்படும் இந்த GPT-4.5 தவறான அல்லது பொருளற்ற தகவல்களை உருவாக்கும் பிரச்சனை குறைவாக உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
மேலும் GPT-4.5 புதிய கண்காணிப்பு நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள என்பதால் இவை பாரம்பரிய முறைகளான supervised fine-tuning மற்றும் reinforcement learning from human feedback (RLHF) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் உணர்வுப்பூர்வமான தகவல் பரிமாற்றத்திற்கும் ஏற்ற மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, GPT-4.5 ChatGPT Pro பயனர்களும் டெவலப்பர்களும் அணுகக்கூடியதாக உள்ளது. அடுத்த வாரத்தில், Plus மற்றும் Team பயனர்களுக்கு இது வழங்கப்படும். அதன் பிறகு, Enterprise மற்றும் Education பயனர்களுக்கும் இது விரிவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
