பிக் பாஸ் 8: சௌந்தர்யா பின்னிட்டா.. விஜய் சேதுபதி கேட்டா அத சொல்லியே ஆகணும்.. ஆனந்தி எடுத்த முடிவு..

By Ajith V

Published:

Ananthi and Soundariya : பிக் பாஸ் நிகழ்ச்சி என வரும் போது என்ன தான் போட்டியாளர்கள் நிறைய திட்டங்களை போட்டு உள்ளே வந்தாலும் அவர்கள் நினைத்ததை போல சில நேரங்களில் ஆட முடியாது. முந்தைய பல சீசன்களில் எல்லாம் பிக்பாஸ் என்பது ஒரு கேம் என்பதை தாண்டி போட்டியாளர்களுக்கு இடையே நல்ல ஒரு எமோஷனலான உறவும் இருந்து வந்தது. ஆனால் தற்போது வரும் பலரும் கேம் என்ற எண்ணத்தில் வருவதுடன் மட்டுமில்லாமல் எந்த போட்டியாளராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து ஆடுவதற்கும் தயாராக உள்ளனர்.

இதன் காரணமாக பாசத்திற்கும், நேசத்திற்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இடமில்லை என்ற ஒரு சூழல் தான் தற்போது எல்லாம் இருந்து வருகிறது. அனைவரும் நட்பு என்பதை தாண்டி ஒரு போட்டியாகவே இதை பார்த்து வருவதால், நிகழ்ச்சியும் மிக விறுவிறுப்பாக சென்று வருகிறது. அந்த வகையில் முத்துக்குமரன், ஆனந்தி, அன்ஸிதா, விஷால் என பலரது கேம் மிகச் சிறப்பாக இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒரு சிலர் போட்டியின் அருமை தெரியாமலே அமைதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு வாரமாக எந்த டாஸ்க்கிலும் பெரிதாக ஈடுபடாமல் யாரிடமும் எந்த விவாதத்திற்கும் செல்லாமல் அமைதியாக தான் தனது கேமை ஆடி வந்தார் சவுந்தர்யா. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக தனது போட்டி தனது கேமில் உள்ள சில தவறுகளை திருத்திக்கொண்டு யாராக இருந்தாலும் துணிச்சலாக எதிர்த்து பேசுவதுடன் மட்டுமில்லாமல் தன் பக்கம் நியாயம் இருந்தால் அதற்காக மோதவும் தயாராக இருந்து வருகிறார் சவுந்தர்யா.

ஒரு பக்கம் மிக ஜாலியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சுற்றித் திரிந்தாலும் டாஸ்க் மற்றும் போட்டிகளுக்கு நடுவே மிக தைரியமாகவும் அதனை எதிர்கொண்டு வருகிறார் சவுந்தர்யா. அப்படி ஒரு சூழலில் சௌந்தர்யாவை பற்றி சுனிதா, ஆனந்தி மற்றும் அன்ஸிதா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது பேசும் ஆனந்தி, “இந்த வாரம் விஜய் சேதுபதி யாரையாவது பாராட்ட வேண்டும் என கேட்டால் நிச்சயம் சௌந்தர்யா பேரை சொல்லுவேன். அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஏனென்றால் சவுந்தர்யாவின் கேமில் நிறைய வித்தியாசத்தை பார்க்க முடிகிறது. இந்த வாரம் சவுந்தர்யாவை ஆறு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேட் செய்தார்கள். அதை நினைத்து மனம் தளராமல் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார் சவுந்தர்யா” என ஆனந்தி கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் அன்ஸிதா, உண்மையில் சௌந்தர்யாவின் ஆட்டத்தில் மாற்றம் உருவாகி இருப்பதாகவும் மிக கடினமாக தனது திறனை வெளிப்படுத்தி வருவதாகவும் பாராட்டியுள்ளார்.