பிக் பாஸ் 8: வயசுக்கு தான் மரியாதை.. ரஞ்சித்தால் ஜாக்குலினுக்கு நேர்ந்த துயரம்.. கடுப்பான சுனிதா..

By Ajith V

Published:

Ranjith and Jacquline : பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது மிக விறுவிறுப்பான கட்டத்தை இந்த மூன்றாவது வாரத்தில் தான் எட்டியுள்ளது என்று சொல்லலாம். முதல் இரண்டு வாரம் சில எபிசோடுகள் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் இன்னொரு சில எபிசோடுகள் கொஞ்சம் மெதுவாகவும் சென்றிருந்தது. முந்தைய சீசன்களைப் போல ஃபயர் இல்லை என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வர, மூன்றாவது வாரத்தில் கொண்டு வரப்பட்ட சில டாஸ்க்குகள் மிகப்பெரிய மோதல்களையும் பிக் பாஸ் வீட்டில் உருவாக்கியிருந்தது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகள் இருப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற சூழலில் சமீபத்தில் காயின் கில்லர் என்ற டாஸ்க்கையும் பிக் பாஸ் கொடுத்திருந்தது. இந்த டாஸ்க் பெண்கள் அணியில் இருக்கும் காயின் ஒன்றை ஆண்கள் எடுப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ஆண்கள் அணிகளில் இருந்த பலரும் பெண்களை தடுத்ததுடன் மிகக் கடுமையாக தங்களின் பலத்தைக் கொண்டு அவர்களை கட்டுப்படுத்தவும் செய்திருந்தனர்.

இதில் சுனிதா, தர்ஷிகா, சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் ஆண்களின் பிடியால் மிக கடினமாகவும் மூச்சு விடவும் திணறி போக, இப்படியும் ஒரு டாஸ்க் கொடுக்க வேண்டுமா என பலரும் விமர்சித்தனர். பொதுவாக நான்கு, ஐந்து ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலம் பொருத்திப் பிடித்தி நிறுத்தும்போது நிச்சியம் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. இதெல்லாம் தெரிந்தும் பிக் பாஸ் இப்படி ஒரு டாஸ்கை கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் அதிகமாக உள்ளது.

இதற்கு மத்தியில்தான் ரஞ்சித்தை மிதித்து விட்டதாக தர்ஷா குப்தாவிடம் அருண் பிரசாத் வாதமிடுகிறார். வயதானவரை இப்படித்தான் படாத இடத்தில் மிதிப்பாயா என்றும் கேட்க இதற்கு அழுது கொண்டே பதில் சொல்லும் தர்ஷா, யாராவது வேண்டுமென்றே ஒருவரை விளையாட்டுக்கு நடுவே அடிக்க முடியுமா என்றும் தனது பக்கமுள்ள நியாயத்தை பேசுகிறார்.

இந்த விஷயத்தில் ஆண்கள் அணியினர் சிலர் தர்ஷாவுக்கு எதிராக பேச ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தன. இதில் ஒரு முறை ஜாக்குலின் காலை பிடித்து ரஞ்சித் அவரை தூக்கி வீசுவதாக கூ்ற அந்த டைமில் பஸர் அடிக்கப்ப்பட்டது. இதன் பின்னர் மற்ற பெண்களிடம் பேசும் ஜாக்குலின், “ரஞ்சித் அப்படியே என் கால புடிச்சு தூக்கி போட வராரு.

என்னால் அவரை திருப்பி எப்படி தூக்கி போட முடியும். உன்னால புடிச்சு அப்படியே தூக்கி போடுறான் பாருன்னு என்கிட்ட சொல்றாரு” என மிக வேதனையில் பேசுகிறார் ஜாக்குலின். அப்போது அவர் அருகே அமர்ந்து பேசும் சுனிதா, “வயசுக்கு தான் மரியாதை. மத்தபடி எதுவும் இல்லை” என ரஞ்சித்தையும் பயங்கரமாக கடிந்து கொள்கிறார்.