எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெக

By John A

Published:

புதுச்சேரி : தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் நேற்று மாரடைப்பால் காலமானார். நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார் சரவணன். அவருக்கு வயது 47. இந்நிலையில் தவெக-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27-ம் தேதி நடைபெற உள்ள சூழலில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. இந்நிலையில் மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடச் சென்ற சரவணன் அங்கு பணிகளை முடித்து விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்தவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகக் கூறினர். இதனால் அவரது குடும்பத்தினர் உள்பட தவெக கட்சியினரும் சோகத்தில் மூழ்கினர்.

சென்னையிலிருந்து தீபாவளிக்குச் சொந்த ஊர் போறீங்களா? இந்த ரூட்ல மட்டும் போகாதீங்க.. அமைச்சர் அட்வைஸ்..

அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்றார். சரவணனின் உடலைப் பார்த்ததும் எங்கடா போன.. என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும் சரவணன் மறைவுக்கு எக்ஸ் தளப்பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த சரவணனுக்கு தவெக கட்சியினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.