பிக் பாஸ் 8: இது உன் வீடு இல்ல.. எரிச்சலா இருக்கு.. சவுந்தர்யாவின் செயலால் வெறுப்பான பெண்கள் அணி..

By Ajith V

Published:

Sunitha Vs Soundariya : பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சில பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பொதுவாக ஆண்கள் அணியில் ஓரளவுக்கு சில போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்தாலும் பெண்கள் அணியில் தான் நிறைய குழுக்கள் இருப்பதாக தெரிகிறது. ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஒரு பக்கம், பவித்ரா, தர்ஷிகா ஆகியோர் ஒரு பக்கம், சுனிதா, அன்ஸிதா ஒரு பக்கம், சாச்சனா ஒரு பக்கம் என நிறைய சிக்கல்ள் உள்ளது.

ஏதாவது ஒரு டாஸ்க்கில் பெண்கள் அணி சார்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் கூ ஒரு அணியாக ஒற்றுமையுடன் இருந்து ஒரு முடிவை எடுக்காமல் மாறி மாறி போட்டி கொண்டே இருப்பதால் பெண்கள் அணியில் நிறைய பிரச்சனைள் இருந்து கொண்டே இருக்கிறது. இதுவரை எலிமினேட் ஆன இரண்டு போட்டியாளர்களும் ஆண்கள் என்பதால் இனி வரும் நாட்களில் பெண்கள் அணி ஒற்றுமையாக இருந்தால் இன்னும் கடினமான சவாலை ஆண்கள் அணிக்கு கொடுக்கலாம் என்ற நிலையும் உள்ளது.

இதற்கு மத்தியில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உணவு விஷயத்தில் அன்ஸிதா மற்றும் சாச்சனா ஆகிய இருவரும் கடுமையாக வார்த்தைகளால் மோதி இருந்தனர். அன்ஸிதா வேண்டுமென்றே தனக்கு உணவு தரவில்லை என சாச்சனா கூற, ஆனால் அன்ஸிதாவோ நான் அப்படி உணவு விஷயத்தில் யாருக்கும் செய்ய மாட்டேன் என்றும் கடுமையாக வாதிடுகிறார். இறுதியில், இருவருமே தேம்பி தேம்பி அழ, இந்த விஷயம் பெண்கள் அணியில் பெரிய விஷயமாக வெடித்திருந்தது.

அப்படி ஒரு சூழலில் மீண்டும் ஒருமுறை சாப்பாட்டு விஷயத்தில் பெண்கள் அணியில் ஒரு பிளவு உருவாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் ருவருக்கு உணவு என்பது குறிப்பிட்ட அளவு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் அனைத்து போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சார்பில் பாயசம் கொடுக்கப்பட, இதில் தனக்கு கொடுக்கப்பட்ட பங்கை தாண்டி சவுந்தர்யா வேறொருவரின் பாயாசத்தையும் சேர்த்து குடித்துள்ளார்.

இது பற்றி கேள்வி கேட்கும் சுனிதா, ‘போன வாரம் தான் சம்ந்தி பிரச்சனை பெருசாச்சு. இப்ப திரும்ப நீ வேற ஒருத்தரோட பாயசத்தை எடுத்துக் குடிக்குறே. ஒரு வாரம் சுகர் இல்லாமல் ஆண்கள் அணி இருந்திருக்கு. நீ அந்த பாயாசத்தை குடித்திருக்க கூடாது. நீ முதிர்ச்சியான ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி நடந்து கொள்வது ஏன் என புரியவில்லை’ என்றும் சுனிதா கூறுகிறார்.

ஆனால் இதனை புரிந்து கொள்ளாமல் பேசும்வுந்தர்யா, நான் அதிகம் குடித்ததில் தப்பு ஒன்றுமில்லை என்றும், உனக்கு தப்பாக தோன்றுகிறது என்றால் கவலை ஒன்றும் இல்லை என்றும் மிக சர்வ சாதாரணமாக கூறுகிறார். தொடர்ந்து பேசும் சுனிதா, நீ ஏன் அடுத்தவரிடம் கேட்காமல் முடிவு செய்கிறாய் என்றும் இது உன் வீடு கிடையாது என்பதையும் அனைவருக்குமா வீடு என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

ஆனாலும் சவுந்தர்யா புரிந்து கொள்ளாமல் இருக்க, இன்னொரு பக்கம் பேசும் ஆனந்தி, நானும் தர்ஷா குப்தாவும் பாயசம் குடிக்கவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் இதை கூட பெரிதாக கண்டு கொள்ளாத சவுந்தர்யா, சாரி என்று மட்டும் கூறி விட்டு அமைதியாக இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் ஒருவரது பங்கை அடுத்தவர் எடுப்பது என்பது தவறு என்ற சூழல் இருந்தும் அதனை இப்படி சர்வ சாதாரணமாக சவுந்தர்யா எதிர்கொண்ட விதம் அதிக விமர்சனத்தையும் உண்டு பண்ணி உள்ளது.