பிக் பாஸ் 8: அன்ஸிதாகிட்டயே நாடகமா.. நல்லவன் மாதிரி பேசி சிக்கிய அர்னவ்.. வீக்கெண்டுல சம்பவம் இருக்கு டோய்..

By Ajith V

Published:

Arnav and Anshitha : பிக் பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் அர்னவ் செய்த விஷயமும் அதற்கு கோபப்பட்டு அன்ஸிதா கொடுத்த ரியாக்ஷனும் அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே அர்னவ் மற்றும் அன்ஸிதா ஆகிய இருவருமே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

இதனிடையே தான் சமீபத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு இடையே நிறைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்கள் அணி சேர்ந்து கிங்ஸ் அவார்ட்ஸ் என்ற பெயரில் பெண்கள் அணியில் சிலருக்கு விருது கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அப்போது டம்மி பாவா, சொம்பு தூக்கி, க்ரூப்ல டூப்பு உள்ளிட்ட சில விருதுகள் கொடுக்கப்படுகிறது. இதில் சொம்பு தூக்கி என்ற விருது, அர்னவ் கையால் அன்ஸிதாவிற்கு கொடுக்கப்படுகிறது.

இதனால் அன்ஸிதா மனமுடைந்து காணப்படுகிறார். “எனக்காக இந்த அவார்டை கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கியா?” என அர்னவிடம் அவர் கேட்டதும் இதற்கு பதில் சொல்லும் அவர், ‘நானாக அதை கொடுக்கவில்லை. மற்ற அனைவரும் தான் என்னை கொடுக்கும்படி கூறினர்’ என விளக்கத்தை கொடுக்கிறார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாத அன்ஸிதா, ‘மற்றவர் கூறினால் நீ ஏன் அதை செய்ய வேண்டும். உனக்கென்று ஒரு முடிவு எடுக்க தெரியாதா. வேறு யார் எனக்கு இந்த விருதை கொடுத்திருந்தாலும் வேதனையாக இருந்திருக்காது. ஆனால் நீ எனக்கு கொடுத்தது மிக கஷ்டமாக இருக்கிறது’ என கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் அன்ஸிதா, “என் ஃபிரண்டுக்கு வாழ்க்கை முழுக்க செம்பு தூக்கனதுனால தான் இது கிடைச்சிருக்கு” என நண்பன் அர்னவை பற்றி மறைமுகமாக சொல்லி கண்ணீர் விடவும் செய்கிறார் அன்ஸிதா. ஆனால் இன்னொரு புறம் அர்னவோ, இது ஒரு கேம் தான் என்றும் மற்றவர்கள் கொடுக்க சொன்னதால் தான் இதை செய்தேன் என்றும் கூறுகிறார். இதனை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத அன்ஸிதா, அங்கிருந்து வருத்தத்தில் எழுந்து சென்று விடுகிறார்.

அன்ஸிதாவும் உடனடியாக அங்கிருந்து கிளம்பி செல்ல மற்ற பெண் போட்டியாளர்களிடம் தான் விருது கொடுத்ததை பற்றி சில விளக்கத்தையும் அர்னவ் கொடுக்கிறார். அப்படி ஒரு சூழலில் தான், அன்ஸிதாவிடம் அர்னவ் சொன்னது பொய் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்கள் அணி சொம்பு தூக்கி விருதை யாருக்கு கொடுக்கலாம் என பேசிய போது, அர்னவ் தான் சுனிதாவிற்கு சொம்பு தூக்கும் அன்ஸிதாவிற்கு கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்.

மேலும் அந்த விருதை அவரே கொடுக்கலாம் என கூறவும் செய்கிறார். ஆனால், அன்ஸிதாவிடம் மாற்றி பேசுவது தொடர்பான விஷயம், பலரும் சொல்வது போல அர்னவ் ஒரு ஃபேக் என்பதையும் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இப்படி இரட்டை முகத்தை வெளிப்படுத்திய அர்னவை வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி கிழித்து தொங்கவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.