Bigg Boss Tamil Season 8 Day 6: Point To Point கேள்விகளுடன் வச்சு செய்த விஜய் சேதுபதி.. அரண்டு போன Housemates!

By Meena

Published:

Bigg Boss Season 8 Day 6 வீகென்ட் எபிசோட் நடைபெற்றது. முதல் வாரம் என்பதால் விஜய் சேதுபதி அவர்களின் பேச்சை காண மகள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். முதல் வாரம் போல் இல்லாமல் நேற்று எபிசோட் மிகவும் விறுவிறுப்பாகவே சென்றது. நேரம் போனதே தெரியவில்லை என்று சொல்லலாம்.

Bigg Boss Tamil

முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதேபோல் முதல் வார இறுதி எபிசோட் அப்படியே இருந்தது. பாயிண்ட் டு பாயிண்ட் கேள்விகளை வைத்து விஜய் சேதுபதி வச்சு செய்து விட்டார். முதல் வாரமே இப்படியா என்று ஹவுஸ்மேட்ஸ் அரண்டு போய்விட்டனர்.

இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருந்தது என்ற கேள்விகளுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. பின்னர் நீங்கள் எல்லோரும் சேஃபாவே விளையாடுறீங்க உங்களோட கருத்துக்களை முன்வைக்க பயப்படுறீங்க போட்டின்னு இறங்கியாச்சுன்னா பயப்படாம துணிஞ்சு செய்யணும் என்று கூறினார்.

அடுத்ததாக ரவிந்தரின் பிராங்க் நடந்ததை வைத்து கிளம்பிய பிரச்சினைகளை பற்றி பேசினார். இதில் விஜய் சேதுபதி ரவீந்தருக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் ரஞ்சித்தும் நானும் நாமினேஷனில் இருக்கிறோம் அதனால் பிராங்க் பண்ணலாம் என்று தான் ரவீந்திர் ஆரம்பித்திருக்கிறார். அதை சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி பேசினார்.

ரவீந்தருக்கு ஒரு நிமிடம் கண்கலங்கிவிட்டது. ரஞ்சித் விஷால் தீபக் அருண் ஆகியோர் விஜய் சேதுபதி இப்படி கூறியதை கேட்டதும் வாயடைத்து போய்விட்டனர்.

மேலும் ஆர்.ஜே ஆனந்தி பிராங்க் அப்படினதும் ரவீந்திர் சார் நல்லா ஆக்டிவா இருக்காரு. மத்த நேரத்துல எல்லாம் நாங்க அவங்களுக்கு தண்ணி கூட கொண்டு எடுத்துக்கொண்டு கொடுத்து பார்த்தோம் அப்படின்னு சொன்னது ரவீந்திரருக்கு மிகவும் வேதனை ஆகிவிட்டது.

அதேபோல் ஹவுஸ்மேட்சின் சில பிஹேவியர்களை மாற்றம் செய்யச் சொல்லி விஜய் சேதுபதி கூறினார். ஜாக்குலின் தர்ஷா ரவீந்தர் ஆகியோருக்கு அறிவுரை கூறினார். கூல், காது வலிக்குது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று கூறினார்.

ரவீந்தரிடம் நீங்கள் எப்போதுமே வாய்ஸ் அதிகமா யூஸ் பண்ணி பேசுறீங்க அப்படி பேசாதீங்க எனவும் ஜெபிரே இடம் நீ சின்ன பையன் டா தம்பி யார் பேசினாலும் நீ கேட்க மாட்டேங்கிற முதல்ல எல்லாரும் பேசுறது கேளு என்றும் அறிவுரை கூறினார் விஜய் சேதுபதி.

Bigg Boss Tamil

ஆண்கள் அணி ஒற்றுமையாக இருந்தாலும் individuality இல்லை எனவும் பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை எனவும் எல்லோரும் அவர்கள் நல்லவர்கள் என்று காட்டுவதற்காக விளையாடுவது போலவும் இருப்பதாக விஜய் சேது சுட்டிக்காட்டினார்.

அதை வரும் காலங்களில் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்தனியா வந்து இருக்கீங்க தனித்தனியா கேம் விளையாடுங்க என்று கூறினார். சாச்சானாவிடம் ரீ என்ட்ரி பற்றி கேட்டார். அடுத்ததாக நீங்கள் குரூப்பாக விளையாடினாலும் தனிதன்மையோடு விளையாடுங்கள் என்று கூறினார் விஜய் சேதுபதி. நேற்றைய எபிசோட் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது.