பிக் பாஸ் 8: அர்னவ் யாரு அதை முடிவு பண்ண.. கோபத்தில் கொந்தளித்த ரஞ்சித், தீபக், விஷால்.. வீடே இனி தான் களைகட்ட போகுது..

By Ajith V

Published:

தமிழில் தற்போது ஆர்மபமாகி உள்ள பிக் பாஸ் 8 து சீசனின் முதல் வாரம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாரத்தில் சுவாரஸ்யம் நிறைந்த சம்பவங்கள் அரங்கேறியதா என கேட்டால் நிச்சயம் பலரும் இல்லை என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு முந்தைசீசன்களை விட இந்த முறை கொஞ்சம் மந்தமாக ஆரம்பித்துள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் அமர்களப்படுத்தினாலும் அவர் போன பின்னர் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை எடுத்து செல்லும் விதம் பெரிய அளவில் ரசிகர்களை கவர தொடங்கவில்லை என்பது தான் உண்மை. பலரும் மிக அமைதியாக இருந்து வருவதுடன் ஏதாவது செய்தால் மக்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து விடுவோமோ என்ற சந்தேகத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

மேலும் மக்கள் தங்களை எப்போதும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இன்னொரு முகத்தை வெளிக்காட்டி ஆடுவதாகவும் தெரிகிறது. ரவீந்தர், ரஞ்சித், ஆனந்தி, தீபக், அர்னவ், ஜாக்குலின் என ஐந்து முதல் ஆறு போட்டியாளர்கள் பற்றி தான் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பேச்சு இருந்து வருகிறது. மற்றவர்களும் இன்னும் ஆர்வம் எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் விளையாட்டை ஆரம்பித்தால் தான் நிகழ்ச்சியும் அடுத்த லெவலுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரா வந்த சீரியல் நடிகர் அர்னவ் மீது ஆரம்பத்திலேயே விமர்சனம் இருந்தது. இவர் தனது காதல் மனைவி திவ்யாவை பிரிந்து மற்றொரு சீரியல் நடிகையான அன்ஸிதாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அன்ஸிதாவும் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்க, இது சரியான முடிவு இல்லை என்பது ரசிகர்களின் வாதமாக உள்ளது.

ஆனால் இந்த இருவருமே முன் பின் தெரியாதவர்கள் போல தங்களை பிக் பாஸ் வீட்டிற்குள் வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், ஆண்கள் அணியில் நான் தான் எல்லாம் என்பது போல அர்னவ் சில முடிவுகளை எடுத்திருந்தது அணிக்குள்ளேயே அதிக கேள்விகளை உருவாக்கி உள்ளது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் அணியில் ஒருவருக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆண்கள் பலரும் அருண் பிரசாத்திற்கு வோட் செய்திருந்தனர். அந்த சம்பவம் குறித்து விஷால், ரஞ்சித் மற்றும் தீபக் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது பேசும் விஷால், “அர்னவ் நாமினேஷன் பிரீ பாஸ் நேரத்தில் பேசியது எனக்கு பிடிக்கவில்லை. அந்த இரண்டு பேர் தான் வாழ்க்கையில் இன்னும் பெரிதாக வரவேண்டும் என அர்னவ் கூறினார். அப்போது நான் எதற்காக இங்கே வந்திருக்கிறேன்?. அவர் எப்படி இங்கே இருப்பவர்களுக்கு என்ன தேவை என்பதை தீர்மானிக்கலாம். எனக்கு ரொம்ப கோபம் வந்தது” என கூறுகிறார்.

இதன் பின்னர் பேசும் தீபக், “ஆமாம். நான் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன். இரண்டு பேரும் தான் செட்டிலாக வேண்டும் என அர்னவ் சொல்வது எந்த விதத்தில் நியாயம். அதை தீர்மானிக்க அவர் யார். ஜாலியாக இருக்கவா இங்கே வந்திருக்கிறோம்” என காரசாரமாக தீபக், விஷால் மற்றும் ரஞ்சித் என மூவரும் இந்த விவாதத்தையும் முன்வைக்கின்றனர்.