Bigg Boss Tamil Season 8 Day 5: ஓயாத Prank சண்டை… ரவீந்தரை அழ வைத்த Real or Fake டாஸ்க்!

By Meena

Published:

Bigg Boss Season 8 Day 5 இல் பிராங்கினால் ஆரம்பித்த சண்டை ஒவ்வொரு இடத்திலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இதைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.

Bigg Boss 8

அது என்னவென்றால் 24 மணி நேரத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறின சாச்னா இன்று மறுபடியும் வீட்டிற்குள் வந்திருக்கிறார். வீட்டிற்குள் வந்ததுமே எப்போதும் பிக் பாஸ் வெளியே இருந்து உள்ளே வருகிறவர்களை வைத்து என்ன டாஸ்க் செய்வாரோ அதே தான் சாச்சனாவிற்க்கும் கொடுத்திருக்கிறார்.

அதாவது வெளியே நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் நிகழ்ச்சியில் ஆக்டிவாக இருப்பது யார், எந்த நபர் இருந்த இடமே தெரியவில்லை ஆகியவற்றை சாச்சனா எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக தனித்தனி குழுக்களாக சாச்சனா பேசிக் கொண்டிருக்கிறார்.

முக்கியமாக பெண்கள் அணியிடம் வெளியே பார்த்ததை வைத்து கூறி உஷாராக இருக்க சொல்கிறார். முத்துக்குமாரின் பேச்சை நம்பாதீர்கள் என்று கூறுகிறார். அடுத்ததாக Real or Fake டாஸ்கை பிக் பாஸ் நடத்தினார். இதில் பலபேரின் உண்மை மும் தெரிந்தது என்று சொல்லலாம்.

இந்த பிராங்கினால் ரவீந்தருக்கு அதிகமானோர் Fake என்று கொடுத்தனர். அந்த டாஸ்க் முடிந்ததும் வீட்டில் மிகுந்த சலசலப்பு சண்டை ஏற்படுகிறது. விஷால் ரவீந்திரிடம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ரஞ்சித்தும் நீங்க கேம் விளையாடுறீங்க சரி நானும் ஒத்துக்கிறேன் ஆனால் என் பெயரை நீங்க ஏன் யூஸ் பண்ணி கேம் ஆடுறீங்க என்று கேட்கிறார்.

Bigg Boss 8

ரவீந்தரும் நான் வந்து எந்த தப்பான விஷயம் பண்ணல என்று கூறுகிறார். மேலும் பெண்கள் அணியில் நடப்பது பிராங்க் என்ன தெரிந்த தர்ஷிகா தர்ஷா இருவருமே பேசாமல் இருந்து அவங்க தான் கேம் ஆடினார்கள் என்று அவர்களை குற்றம் சாட்டுகிறார்.

எல்லோரும் பேசிவிட்டு சென்றதும் எதற்கும் அசராத ரவீந்தரே அழ ஆரம்பித்து விட்டார். சௌந்தர்யா போன்றோர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். இப்படியாக பரபரப்பாக முதல் வாரம் இறுதி அடைந்து விட்டது. நாளை விஜயசேதுபதி எபிசோடில் அவர் எப்படி இந்த வார நிகழ்வுகளை பேசுகிறார் என்பதை காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.